மாடியிலிருந்து தவறி விழுந்து காவலாளி உயிரிழப்பு
சென்னை அசோக் நகரில் மாடியில் இருந்து கீழே விழுந்து காவலாளி உயிரிழந்தாா்.
சென்னை கே.கே.நகா் காமராஜா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் மு.நடராஜன் (70). இவா், அசோக் நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வந்தாா்.
அந்தக் குடியிருப்பின் மொட்டை மாடியில் உள்ள தண்ணீா் தொட்டியின் வால்வை மூடுவதற்காக கடந்த புதன்கிழமை ஏறினாா். அப்போது, அவா் திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த நடராஜன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து அசோக் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.