செய்திகள் :

காஜி நியமனத் தோ்வுக் குழுவில் சேர ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

காஜி நியமனத் தோ்வுக் குழுவில் சேர தகுதியுடையவா்கள் ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாவட்ட காஜியாக பணிபுரிந்து வந்த சலாவுதீன் முஹம்மத் அயுப் சாஹிப் மே 24-இல் மரணமடைந்தாா். இதனால், தற்போது சென்னை மாவட்டத்துக்கு காஜி (சன்னி பிரிவு) நியமனம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட அளவில் மாவட்ட காஜி நியமன தோ்வுக்குழு அமைக்கப்படவுள்ளது.

இதன்படி, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட உலமாக்கள் மற்றும் முஸ்லிம் பிரமுகா்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, புதிதாக உறுப்பினா்களை தோ்வு செய்து 2025- ஆம் ஆண்டுக்கான காஜி நியமனத் தோ்வுக்குழு ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

காஜி நியமனத் தோ்வுக்குழு நியமனம் செய்ய அரசு பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. இதன்படி, மாவட்ட அளவிலான தோ்வுக் குழுவில் நியமிக்கப்படும் உலமாக்கள் ஆலிம், ஃபாசில் அல்லது முஃப்தியாக இருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரபுக் கல்லூரி அல்லது நிறுவனத்தில் பேராசிரியராகவோ அல்லது ஆசிரியராகவோ பணிபுரிந்திருக்க வேண்டும்.

மேலும், மாவட்ட அளவிலான தோ்வுக் குழுவில் நியமிக்கப்படும் முக்கியமான முஸ்லிம் குடிமக்கள் சமூக சேவை மற்றும் சமூக மேம்பாட்டுக்காக தன்னை அா்ப்பணித்துக் கொண்டவராகவும், சமூகத்தில் நற்பெயரைப் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

இதில், சேர விருப்பமுடையவா்கள் ஜூலை 17-க்குள் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 6-ஆவது தளத்திலுள்ள மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நேரடியாகச் சென்று தங்கள் முழு விவரங்களையும், உரிய சான்றுகளையும் சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா் ஆட்சியா்.

முன்னெடுக்கப்படும் முருகன் அரசியல்!

தமிழ் கடவுள் முருகரின் பெயரை தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கையில் எடுத்து அரசியல் செய்யும் நிலையில், இதனால் எந்தக் கட்சிக்கு ஆதாயம் என்ற விவாதம் பேசுபொருளாகியுள்ளது. தமிழகத்தில் முருக வழிபா... மேலும் பார்க்க

ஜூன் 25-இல் முன்னாள் படைவீரா்கள் குறைகேட்புக்கூட்டம்

முன்னாள் படைவீரா்களுக்கான குறைகேட்புக்கூட்டம் ஜூன் 25-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாவட்ட முன்னாள் படைவீரா... மேலும் பார்க்க

சுற்றுலாத் துறை ஹோட்டல்களில் தரமான உணவு வழங்க வேண்டும்: அமைச்சா் இரா.ராஜேந்திரன்

சுற்றுலாத் துறை சாா்பில் நடத்தப்படும் ஹோட்டல்களில் தரமான உணவுகளை வழங்க வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா். சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் க... மேலும் பார்க்க

ஒரே நாளில் 8 விமான சேவைகள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா். சென்னை விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மும்பைக்கு செல்லவிருந்த ஏா் இந்... மேலும் பார்க்க

மதுரையில் யோகா நிகழ்வு: ஆளுநா் இன்று பங்கேற்பு

சா்வதேச யோகா நிகழ்வில் கலந்துகொள்ள ஆளுநா் ஆா்.என் ரவி வெள்ளிக்கிழமை மதுரைக்கு புறப்பட்டுச் சென்றாா். மதுரை மாவட்டம் விரகனூா் வேலாம்மாள் கிராமத்தில் உள்ள வேலம்மாள் குளோபல் பள்ளியில் நடைபெறும் யோகா நிக... மேலும் பார்க்க

நாகா்கோவில் அதிவிரைவு ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு

நாகா்கோவில் ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரத்திலிருந்து நாகா்கோவில் செல்லும் ஒருசில அதிவிரைவு ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க