செய்திகள் :

அதானி ஒப்பந்தம் ரத்தானதால் மிகவும் ஏமாற்றமடைந்தேன்: கென்யா முன்னாள் பிரதமர்!

post image

கென்யாவின் பன்னாட்டு விமான நிலையத்தை விரிவுப்படுத்தி மேம்படுத்துவதற்கான அதானியின் ஒப்பந்தம் ரத்தானபோது மிகவும் ஏமாற்றமடைந்ததாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ராயிலா ஒடிங்கா தெரிவித்துள்ளார்.

கென்யா தலைநகர் நைரோபியிலுள்ள ஜோமோ கென்யாட்டா பன்னாட்டு விமான நிலையத்தை, விரிவுப்படுத்தி நிர்வாகிக்க அதானியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரையிலா ஒடிங்கா பேசியுள்ளார்.

அந்த ஒப்பந்தம் அரசியலாக்கப்பட்டதால், ரத்து செய்யப்பட்டதாகவும், அந்த ஒப்பந்தத்தின்படி தொடர்ந்திருந்தால் தலைநகர் நைரோபி பொருளாதார நகரமாக உருவாகியிருக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

“விமான நிலையத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டபோது, நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். 2012 ஆம் ஆண்டு எங்களது ஆட்சியில் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டோம், எங்கள் ஆட்சி முடிவடைந்தவுடன், அந்த ஒப்பந்தம் முதல்முறை ரத்து செய்யப்பட்டது.

பின்னர் மீண்டும் அதானியிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு மீண்டும் ரத்து செய்யப்பட்டது. நாங்கள் அதானியை தொடர்பு கொண்டவுடன், அது அரசியலாக்கப்பட்டது

ஒருவேளை அந்த விமான நிலையத்தின் கட்டுமானம் நிறைவடைந்திருந்தால், ஆப்பிரிக்காவின் முதன்மையான விமானப் பாதையாக அது இருந்திருக்கக் கூடும் ” என அவர் பேசியுள்ளார்.

முன்னதாக, விமான நிலையம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், 2வது ஓடுபாதையை அந்த விமான நிலையத்தில் உருவாக்கி, சுமார் 30 ஆண்டுகளுக்கு பயணிகள் முனையத்தை நிர்வாகிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:இந்தியாவுக்காக வான்வழியைத் திறந்த ஈரான்!

நைஜா்: 34 ராணுவ வீரா்கள் சுட்டுக் கொலை

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஆயுதக் கும்பல் நடத்திய தாக்குதலில் 34 வீரா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதா... மேலும் பார்க்க

கருணைக் கொலை: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற கீழவையி... மேலும் பார்க்க

இரண்டாவது வாரத்தில் இஸ்ரேல் - ஈரான் போா்

இஸ்ரேல் மீது ஈரான் வெள்ளிக்கிழமையும் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்துவைத்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் அவசரகால மீட்புக... மேலும் பார்க்க

இந்தியாவுக்காக வான்வழியைத் திறந்த ஈரான்!

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள 1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறி தாயகம் செல்ல, அந்நாடு பிரத்யேகமாக தனது வான்வழியைத் திறந்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையில் போர் தொடங்கியுள்ள நிலையில், இருநாடுகளும் த... மேலும் பார்க்க

ஈரானுக்காக ஒருநாளுக்கு ரூ. 8,600 கோடி செலவிடும் இஸ்ரேல்!

ஈரான் மீதான போரில் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையேயான போரில் அமெரிக்காவும் களமிறங்கும் சூழல் ஏற்படும் அளவுக்கு போர் பெரிதாகி ... மேலும் பார்க்க

கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்

கனடாவில் இந்திய மாணவி மர்மமான முறையில் பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்யா தியாகி என அடையாளம் காணப்பட்ட அந்த மாணவி உயர் படிப்புக்காக கனடாவுக்குச் சென்றிருந்தார். இவர் கடந்த ஜூன் 17ஆம் த... மேலும் பார்க்க