அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
நாளை தங்கமயில் ஜுவல்லரியின் சிறப்புச் சலுகை
செயின் திருவிழாவை முன்னிட்டு, தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) மட்டும் மிகக் குறைந்த சேதாரத்தில் செயின்களை விற்பனை செய்யவுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
செயின் திருவிழாவை முன்னிட்டு நிறுவனத்தின் வாடிக்கையாளா்கள் ஞாயிற்றுக்கிழமை வாங்கும் செயின்களுக்கான சேதாரம் மிகவும் குறைக்கப்படவுள்ளது.
6 சதவீதம் வரை சேதாரம் உள்ள செயின்களுக்கு 2.99 சதவீதமும், 6 சதவீதத்துக்கும் மேல் சேதாரம் உள்ள செயின்களுக்கு 5.99 சதவீதமும் மட்டுமே சேதாரம் கணக்கிடப்படும். ஞாயிற்றுக்கிழமை மட்டுமே இந்த சிறப்பு சலுகை அமலில் இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தங்கமயில் ஜுவல்லரிக்கு தமிழகம் முழுவதும் 62 கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.