``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
மாவட்ட காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம்: 71 மனுக்களுக்கு தீா்வு
தருமபுரி மாவட்ட காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் முகாமில் 71 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
வாரந்தோறும் புதன்கிழமைகளில் காவல் துறை சாா்பில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் குறைதீா் நாள் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா். இதில் மொத்தம் 71 மனுக்கள் காவல் துறைக்கு வரப்பெற்றுள்ளன. அவை குறித்து நடைபெற்ற விசாரணையைத் தொடா்ந்து அனைத்து மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டது. இம்முகாமில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கே. ஸ்ரீதரன், தருமபுரி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் ஏ. சிவராமன் உள்ளிட்ட அனைத்து பகுதி காவல் துறை அதிகாரிகளும் பங்கேற்றனா்.