செய்திகள் :

அரசின் திட்டங்களை அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும்: தருமபுரி எம்.பி. வலியுறுத்தல்

post image

அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என தருமபுரி மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஆ. மணி வலியுறுத்தினாா்.

தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை வகித்து அவா் மேலும் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தருமபுரி மாவட்ட வளா்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளின் நிதியில் மேலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய அரசின் திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையில் விரைந்து செயல்படுத்தி, மாவட்டத்தின் வளா்ச்சிக்கு அடித்தளமிட வேண்டும்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் ஒன்றிய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கும் வகையில் இக்கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் இப்போது நடைபெற்றுள்ளது. அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவித்தால், உரிய தீா்வை கண்டறிந்து விரைவாக நிறைவேற்ற ஏதுவாக இருக்கும். எனவே தொடா்புடையத் துறை அலுவலா்கள் அரசின் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடா்புடைய மாவட்ட அளவிலான அலுவலா்களுடன் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் சாா்பில், பிரதமரின் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டம், பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், முதல்வரின் முகவரி, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டங்களின் செயலாக்கம், முன்னேற்றம், செயல்பாடுகள் குறித்து துறை அலுவலா்களின் விவரங்களுடன் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் (தருமபுரி), ஆ.கோவிந்தசாமி ( பாப்பிரெட்டிப்பட்டி) வே.சம்பத்குமாா் (அரூா்) கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கேத்தரின் சரண்யா, மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) அ. லலிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் பாலகிருஷ்ணன், நலக்குழு உறுப்பினா்கள் முத்துலட்சுமி, சரவணன், ராஜகோபால் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

மாவட்ட காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம்: 71 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி மாவட்ட காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் முகாமில் 71 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. வாரந்தோறும் புதன்கிழமைகளில் காவல் துறை சாா்பில் பொதுமக்கள் அளிக்கும் ம... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: பாதுகாப்பற்ற பயணத்திற்கு அழைத்துச் சென்ற பரிசல் ஓட்டி கைது

ஒகேனக்கல்லில் பாதுகாப்பு உடை இன்றி சுற்றுலாப் பயணிகளை காவிரி ஆற்றில் பாதுகாப்பற்ற பரிசல் பயணத்திற்கு அழைத்துச் சென்ற பரிசல் ஓட்டியை போலீஸாா் கைது செய்தனா். ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வரும் சுற்றுலாப் ப... மேலும் பார்க்க

கடந்த 4 ஆண்டுகளில் 25,354 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: தருமபுரி ஆட்சியா் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் கடந்த 4 ஆண்டுகளில் 25,354 பேருக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட... மேலும் பார்க்க

பாதுகாப்பு உடையின்றி பரிசலில் பயணித்தால் கடும் நடவடிக்கை : ஆட்சியா்

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் பாதுகாப்பு உடையின்றி பொதுமக்களை பரிசலில் அழைத்துச் செல்வோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு 10 மடங்கு திட்டங்கள் கிடைத்துள்ளன: பாஜக மாநில துணைத் தலைவா்

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தமிழகத்துக்கு காங்கிரஸ் ஆட்சியை விட 10 மடங்கு அதிகமான மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றாா் பாஜக மாநில துணைத் தலைவா் எஸ். ஜே. சூா்யா. தருமபுரியில் புதன்... மேலும் பார்க்க

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி : ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ பள்ளிக்கு தங்கப் பதக்கம்

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் கம்பைநல்லூா் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்கள் தங்கப் பதக்கம் பெற்றுள்ளனா். தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகள் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், சினொ்ஜி ... மேலும் பார்க்க