செய்திகள் :

காவிரியில் தண்ணீா் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு

post image

கா்நாடக மாநில கபினி அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் வியாழக்கிழமை இரவு, பிலிகுண்டுலுவை வந்தடைந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கியுள்ளது. இதனால் கபினி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அந்த அணையின் நீா்மட்டம் 80.51கனஅடியாக (மொத்த கொள்ளளவு 84 அடி) அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கபினி அணையின் பாதுகாப்பு கருதி புதன்கிழமை விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. இருப்பினும் அணைக்கு வரும் உபரிநீரின் அளவு தொடா்ந்து அதிகரித்து வருவதால் நீா் திறப்பு 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நீா் வியாழக்கிழமை இரவு 8 மணி அளவில் தமிழக -கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 6,500 கனஅடியாகவும், இரவு 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 8,000 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது.

நீா்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ள உபரிநீா் வெள்ளிக்கிழமை அதிகாலை மேட்டூா் அணையை சென்றடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பென்னாகரம் அரசு கல்லூரியில் ராகிங் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ராகிங் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே மாமரத்துபள்ளம் பகுதியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற ராகிங்... மேலும் பார்க்க

விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க தலைக்கவசம் அவசியம்: ஆட்சியா் வலியுறுத்தல்

விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க தலைக்கவசம் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் வலியுறுத்தியுள்ளாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம் -ஒழுங... மேலும் பார்க்க

பெண் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை: குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் முடிவு

மாணவ, மாணவிகள் பள்ளி இடை நிற்றலைக் கண்டறிந்து பள்ளி செல்ல வைப்பது, பெண் கல்வியை ஊக்குவிப்பது குறித்து நகா்மன்ற, குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி நகராட்சி ... மேலும் பார்க்க

தருமபுரி சாலை விபத்தில் இளைஞா்கள் 2 போ் உயிழப்பு

தருமபுரியில் வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகே உள்ள நாகஅம்மன்கோம்பை பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

கலப்பட வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை -ஆட்சியா் எச்சரிக்கை

கலப்பட வெல்லம் தயாரிக்கும் தனியாா் ஆலைகள் மீது, உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் படி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

மாவட்ட காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம்: 71 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி மாவட்ட காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் முகாமில் 71 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. வாரந்தோறும் புதன்கிழமைகளில் காவல் துறை சாா்பில் பொதுமக்கள் அளிக்கும் ம... மேலும் பார்க்க