செய்திகள் :

சேலம் உருக்காலையில் மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி ஆய்வு

post image

மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஹெ.டி.குமாரசாமி சேலம் உருக்காலையில் ஆய்வு செய்தார்.

மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, அமைச்சராக பதவியேற்ற பின் சேலம் உருக்காலைக்கு முதல்முறையாக கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வருகை தந்தார். சேலம் உருக்காலையை அப்போது அவர் ஆய்வு செய்தார்.

இதனிடையே 2-வது முறையாக அமைச்சர் ஹெ.டி.குமாரசாமி சேலம் உருக்காலைக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தார். அவருக்கு சேலம் உருக்காலை விருந்தினர் மாளிகையில் உருக்காலை நிர்வாக இயக்குனர் பிரபீர் குமார் சர்க்கார் தலைமையில் அலுவலர்கள் வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் அளிக்கும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அமைச்சர், அணிவகுப்பினை பார்வையிட்டார். பின்னர் உருக்காலை வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியிலும் அமைச்சர் பங்கேற்று மரக்கன்றை நட்டு வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் குமாரசாமி, உருக்காலையில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் நாளை நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் உருக்காலை பணியாளர்களுடன் இணைந்து யோகா செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வுக்கு பின்னர் சேலத்தில் தங்கும் அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, சனிக்கிழமை காலை உருக்காலை வளாகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தலைமையில் சேலம் உருக்காலை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவியர் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்கின்றனர்.

கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்

கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?: அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி

கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்? என அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழர் நாகரீகம் உலகின் மூத்த நாகரீகம் என நிறுவும் கீழடி சான்றுகளை அவமதிக்... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ல் வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் முடிவு ஜூன் 23-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நடைபெற்று முடிந்த மா... மேலும் பார்க்க

காதலி வீட்டில் தலித் இளைஞர் தூக்கிட்டு தற்கொலையா? நயினார் நாகேந்திரன் எழுப்பும் கேள்வி!

கன்னியாகுமரியில் காதலியின் வீட்டில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு, மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்த... மேலும் பார்க்க

தமிழகத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் முயற்சி! அமித் ஷா மீண்டும் வருகை?

மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகத்துக்கு வருகை தரவிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகம் வருகை தரவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

மருத்துவமனையில் ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்த ராமதாஸ்!

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணியை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவத் தலைவரும் அ... மேலும் பார்க்க

கண்ணாடி பாட்டினுள் விஜய் ஓவியம் !

தவெக தலைவர் விஜய்யின் 51-வது பிறந்த நாளை யொட்டி கண்ணாடி பாட்டிலின் உள்ளே விஜய்யின் ஓவியத்தை வரைந்து ஓவியர் யூஎம்டி ராஜா அசத்தியுள்ளார். ஜூன் 22ஆம் தேதி அன்று, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான வ... மேலும் பார்க்க