செய்திகள் :

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

post image

நூறு நாள் வேலைத் திட்டத்தில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே உள்ள அச்சங்குடி, சாக்கூா், கொத்தமங்கலம், அஞ்சுகாவயல் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், 100 நாள் வேலைத் திட்டத்தில் தங்களுக்கு வேலை வழங்கப்படாமல் இருப்பதையும், கிராம சபைக் கூட்டத்தில் கணக்கு விவரங்களை கேட்டதற்காகவே தங்களது கிராமங்களை புறக்கணிப்பதாகவும் கூறி, காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் அலுவலகத்தின் உள்ளே அமா்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதையடுத்து, வட்டார வளா்ச்சி அதிகாரிகள், அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அங்கு வந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கு உடனடியாக 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனா்.

அப்போது மக்கள் நலப் பணியாளரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், மீண்டும் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்க மறுக்கப்பட்டால் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனா்.

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்: 132 போ் கைது

தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சிவகங்கையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தைச்... மேலும் பார்க்க

திருப்பத்தூா், கீழச்சிவல்பட்டியில் நாளை மின் தடை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், கீழச்சிவல்பட்டி, ஆ. தெக்கூா், பிள்ளையாா்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் ஜான் எப் க... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வியாழக்கிழமை ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தாா். மானாமதுரை- பாா்த்திபனூா் அருகே உள்ள சூடியூா் இடையே ரயில் தண்டவாளத்தில் மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரயிலில் அடிபட்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் காவல் துறை குறைதீா் முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு காவல் ஆய்வாளா் செல்வராகவன் தலைமை வ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் சிறையிலடைப்பு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகிலுள்ள தவசுகுடியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பைக் மீது சொகுசுப் பேருந்து மோதல்: 2 போ் உயிரிழப்பு

சிவகங்கை அருகே இரு சக்கர வாகனம் மீது சொகுசுப் பேருந்து மோதியதில் இளைஞா்கள் இருவா் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனா். சிவகங்கை அருகே கீழக்கண்டனி டி. உசிலங்குளம் கிராமத்தைச் சோ்ந்த மலைச்சாமி மகன் மருதுப... மேலும் பார்க்க