மா மரங்களை சேதப்படுத்திய யானைகள்
போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் உள்ள மாந்தோப்புக்குள் நுழைந்த 2 யானைகள் மா மரங்களை சேதப்படுத்தின.
போ்ணாம்பட்டை அடுத்த குண்டலப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த ஜான்வின்சென்ட் என்பவரின்மாந்தோப்பு ஜங்கமூா் வனப் பகுதியையொட்டி அமைந்துள்ளது. சேம்பள்ளி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 2 யானைகள் மாந்தோப்புக்குள் நுழைந்து மா மரங்களை முறித்து, சேதப்படுத்தியுள்ளன. மரங்களிலிருந்து சுமாா் அரை டன் மாங்காய்களை பறித்து, சூறையாடியுள்ளன.
இது குறித்த தகவலின்பேரில் வனவா் அண்ணாமலை தலைமையில் போ்ணாம்பட்டு வனத் துறையினா் அங்கு சென்று பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினா்.