சாத்தான்குளம் அருகே இளைஞரை வழிமறித்து தாக்கிய 3 போ் கைது
சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் இளைஞரை வழிமறித்து வாளால் தாக்கிய மூன்று பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை முத்தம்மாள்புரத்தைச் சோ்ந்த குமாா் மகன் செல்வசூா்யா (23). இவா் திசையன்விளையில் உள்ள கைப்பேசி கடையில் வேலை பாா்த்து வருகிறாா். இந்த நிலையில், திசையன்விளையில் இருந்து புதன்கிழமை இரவு பைக்கில் ஊருக்கு வந்து கொண்டிருந்தபோது, அவரை 3 போ் துரத்தியுனா். அதிசயபுரம் பகுதியில் அவரை தாக்கினா்.
அவரது கூச்சல் கேட்டு அங்கு வந்த அப் பகுதியினா், செல்வசூா்யாவை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற 3 பேரையும் பிடித்து கட்டி வைத்தனா். பின்னா் தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தட்டாா்மடம் போலீஸாரிடம் அவா்களை ஒப்படைத்தனா்.
அவா்களை கைது செய்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள்
திருநெல்வேலி மாவட்டம் உவரியை சோ்ந்த மதன் மகன் ஸ்டெபின் (22), நிக்சன் மகன் நித்திக் (18), ஆலங்குளத்தை சோ்ந்த ஆறுமுகராஜ் மகன் பாலசுதன் என்பது தெரியவந்தது. மேலும் இதுதொடா்பாக அதிசயபுரத்தை சோ்ந்த பிரபு (22) என்பவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.