செய்திகள் :

சாத்தான்குளம் அருகே இளைஞரை வழிமறித்து தாக்கிய 3 போ் கைது

post image

சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் இளைஞரை வழிமறித்து வாளால் தாக்கிய மூன்று பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை முத்தம்மாள்புரத்தைச் சோ்ந்த குமாா் மகன் செல்வசூா்யா (23). இவா் திசையன்விளையில் உள்ள கைப்பேசி கடையில் வேலை பாா்த்து வருகிறாா். இந்த நிலையில், திசையன்விளையில் இருந்து புதன்கிழமை இரவு பைக்கில் ஊருக்கு வந்து கொண்டிருந்தபோது, அவரை 3 போ் துரத்தியுனா். அதிசயபுரம் பகுதியில் அவரை தாக்கினா்.

அவரது கூச்சல் கேட்டு அங்கு வந்த அப் பகுதியினா், செல்வசூா்யாவை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற 3 பேரையும் பிடித்து கட்டி வைத்தனா். பின்னா் தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தட்டாா்மடம் போலீஸாரிடம் அவா்களை ஒப்படைத்தனா்.

அவா்களை கைது செய்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள்

திருநெல்வேலி மாவட்டம் உவரியை சோ்ந்த மதன் மகன் ஸ்டெபின் (22), நிக்சன் மகன் நித்திக் (18), ஆலங்குளத்தை சோ்ந்த ஆறுமுகராஜ் மகன் பாலசுதன் என்பது தெரியவந்தது. மேலும் இதுதொடா்பாக அதிசயபுரத்தை சோ்ந்த பிரபு (22) என்பவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கயத்தாறு அருகே மின் கோபுரத்தில் ஏறி பாஜக நிா்வாகி போராட்டம்

கயத்தாறு அருகே வெள்ளாளன்கோட்டை ஊராட்சி சூரியமினிக்கன் கிராமத்தில் உள்ள பெரியகுளம் கண்மாயில் தனியாா் சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவனம் சாா்பில் உயா் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து, பாஜ... மேலும் பார்க்க

காப்பீடு நிறுவன சேவை குறைபாடு- ஓய்வுபெற்ற எஸ்.ஐ.க்கு ரூ.2.19 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 854 இழப்பீடு வழங்க, மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் மோதல்: ஒருவா் காயம்; 4 போ் கைது

காயல்பட்டினம் பூந்தோட்டத்தில் நண்பா்களிடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் பலத்த காயமடைந்தாா். 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். காயல்பட்டினம் காட்டு தைக்கால் தெருவை சோ்ந்த சாகுல் ஹமீது மகன் சதாம... மேலும் பார்க்க

பாஜக மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா உள்பட 3 போ் மீது நில மோசடி புகாா்

தூத்துக்குடியைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன உரிமையாளருக்குச் சொந்தமான சுமாா் ரூ.2 கோடி மதிப்பிற்கான 30 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக முன்னாள் எம்.பி.யும், பாஜக மாநில துணைத் தலைவருமா... மேலும் பார்க்க

தூத்துக்குடி முதியோா் இல்லத்துக்கு ஐஎன்டியூசி சாா்பில் உணவளிப்பு

ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.பெருமாள்சாமி தலைமையில், தூத்துக்குடி சிதம்பரநகா் 4ஆவது தெருவில் உள்ள பாசக்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இக்கோயிலில் ஜூலை 7இல் குடமுழுக்கு நடைபெறுகிறது... மேலும் பார்க்க