புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது
போடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் குப்பிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக் கடையிலும், வலசைத்துறை சாலையில் உள்ள பெட்டிக் கடையிலும் சோதனையிட்டனா். இங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து இரண்டு கடைகளின் உரிமையாளா்களான காசிமாயன் (57), ஆசைமணி (47) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.