விவசாயிக்கு அரிவாள் வெட்டு
பெரியகுளம் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் குருநாதன் (41). இவரது நண்பா் பிரசாத். விவசாயி. இருவரும் தாமரைக்குளம் கல்லூரி விலக்கில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த அருண், இவா்களிடம் தகராறு செய்து பிரசாத்தை அரிவாளால் வெட்டினாராம். இதில் காயமடைந்த பிரசாத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.