செய்திகள் :

நீல் மோகன்: இந்திய - அமெரிக்கரை தக்கவைக்க 100 மில்லியன் டாலர் வழங்கிய கூகுள்! - ஏன் தெரியுமா?

post image

10 ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் நிறுவனம் ஓர் இந்திய - அமெரிக்க தொழிலதிபர், ட்விட்டர் நிறுவனத்துக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக 100 மில்லியன் டாலர்கள் வழங்கியது என்றால் நம்ப முடிகிறதா?

செரொதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், இப்போது யூடியூப் சி.இ.ஓ-வாக இருக்கும் நீல் மோகன் திறமைக்காக நிறுவனங்களுக்குள் சண்டை எழுந்தது பற்றி பேசியுள்ளார்.

Nikil Kamath
Nikil Kamath Podcast

2011ம் ஆண்டு கூகுளின் விளம்பரங்களிலும், யூடியூபின் தயாரிப்பு யுத்திகளிலும் முக்கிய பங்காற்றி வந்தார் நீல் மோகன். டெட் சர்ச் தளத்தின் 2011 அறிக்கைபடி, கூகுள் வரையறுக்கப்பட்ட பங்குகளாக அந்த தொகையை வழங்கியிருக்கிறது (இதை சில ஆண்டுகளுக்குப் பிறகே கையகப்படுத்த முடியும்).

நீல் மோகன் ட்விட்டரில் இணைவதைத் தடுக்க, கூகுள் மிகத் தீவிரமாகச் செயல்பட்டது. ஏனென்றால் அவரது முன்னாள் உயரதிகாரி டேவிட் ரோசன்ப்ளாட் ட்விட்டரில் தலைமைக் குழு உறுப்பினராக இருந்தார். நீல் மோகனை தலைமை தயாரிப்பு அதிகாரியாக நியமிக்க விரும்பினார்.

இருந்தாலும் இந்த 100 மில்லியன் டாலர் தகவல் அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், நிகில் காமத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீல் மோகனிடம், "வேலையை விட்டுவிடாமல் இருக்க கூகுள் உங்களுக்கு 100 மில்லியன் டாலர்களை வழங்குவதாக படித்தது எனக்கு நினைவிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு அது மிகப் பெரிய தொகையாக இருந்திருக்குமே" எனக் கேட்டார். இந்தக் கூற்றை நீல் மோகன் மறுக்கவில்லை.

யார் இந்த நீல் மோகன்?

நீல் மோகன் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிகல் இன்ஜினீயரிங் படித்தவர். இன்று அசென்சர் என அறியப்படும் ஆண்டர்சன் கன்சல்டிங் நிறுவனத்தில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.

பின்னர் நெட் கிராவிட்டி நிறுவனத்துக்கு மாறினார். அந்த நிறுவனத்தை டபுள்க்ளிக் என்ற நிறுவனம் வாங்கியது. டபுள்க்ளிக்கில் பல படிகள் உயர்ந்து வணிக நடவடிக்கைகளின் துணைத் தலைவர் பதவிக்கு வந்தார்.

Modi - Mohan

2007ம் ஆண்டு கூகுள்  $3.1 பில்லியன் விலைக்கு டபுள்க்ளிக் நிறுவனத்தை வாங்கியது. கூகுள் விளம்பர வணிகத்தில் தலைமை பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

2011ம் ஆண்டு கூகுளின் தயாரிப்பு மேம்பாட்டு உத்திகளை வகுப்பதில் முக்கிய புள்ளியாக இருந்தார். யூடியூபின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் நபராக திகழ்ந்தார். அவரது மதிப்பை அங்கீகரிக்கும் விதமாகவே கூகுள் 100 மில்லியன் டாலர்கள் வழங்க முன்வந்துள்ளது. நீண்டநாள் நோக்கில் இப்போது அது லாபகரமான ஒன்றாகவே மாறியிருக்கிறது. இன்று நீல் மோகன் யூடியூப் சி.இ.ஓ-வாக திறம்பட செயல்பட்டு வருகிறார்.

Veo 3: சினிமாவின் எதிர்காலம் இதுதானா? - டெக் உலகை அதிரவைத்த கூகுளின் புதிய AI!

இந்த வாரத் தொடக்கத்தில் கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாடு I/O 2025 நடைபெற்றது. இதில் பல ஏஐ அப்டேட்களுடன் கூகுள், அதன் ஏஐ வீடியோ உருவாக்கும் மாடல் Veo 3 -ஐ வெளியிட்டது. இது கூகுள் ஃப்ளோ த... மேலும் பார்க்க

AI-ஐ நம்பி 700 பேரை பணி நீக்கம் செய்த நிறுவனம்.. மீண்டும் மனிதர்களை அழைப்பது ஏன்?

செயற்கை நுண்ணறிவு மிகப் பெரிய சக்தியாக வளர்ந்திருந்தாலும், அதனால் மனிதர்களைத் தாண்டிய புத்திக்கூர்மையுடன் செயல்பட முடியாதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது சமீபத்தில் நடந்த சம்பவம். ஸ்வீடனில் உள்ள நிதி ... மேலும் பார்க்க

"Apple தொழிற்சாலைகளைச் சீனாவில் தொடங்க காரணம்..." - ஆப்பிள் தலைமை அதிகாரி டிம் குக் சொன்னது என்ன?

சமீபத்தில் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது இந்தியா முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது.அது...ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகார... மேலும் பார்க்க