செய்திகள் :

``மனித மூளையை மிஞ்சும் நுண்ணறிவு AI'' - சூப்பர் இன்டெலிஜென்ஸ் குழுவை அமைத்த மார்க் ஜுக்கர்பெர்க்!

post image

மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் புதிய ”சூப்பர் இன்டெலிஜென்ஸ்” குழுவை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தி நியூயார்க் டைம்ஸ் கூற்றுப்படி, மார்க் ஜுக்கர்பெர்க் தனிப்பட்ட முறையில் இந்த புதிய குழுவை உருவாக்கி வருவதாகவும் இதற்கென 50 நிபுணர்களை இந்த குழுவில் சேர்த்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மெட்டா சமீபத்தில் ஒரு பெரிய மொழி மாதிரி (Large Language Model - LLM) ‘லாமா 4’ என கொண்டுவந்தது.

AI

இது எதிர்பார்த்த அளவுக்கு செயல்படாததால் ஜுக்கர்பெர்க் அதிருப்தி அடைந்ததே இந்த புதிய முயற்சிக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.

புதிய ”சூப்பர் இன்டெலிஜென்ஸ்” குழுவில் சுமார் 50 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்கேல் AI இன் நிறுவனர் அலெக்ஸாண்ட்ரா வாங், புதிய குழுவில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் மனித மூளையை மிஞ்சும் நுண்ணறிவுடன் AI அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் ஒரு புதிய மெட்டா ஆராய்ச்சி ஆய்வகத்தில் முன்னணிப் பங்கை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த தலைமுறை AI மாடல்களின் மேம்பாட்டை விரைவுபடுத்துவதே இந்த புதிய குழுவின் முக்கிய நோக்கம் என கூறப்பட்டுள்ளது.

"ஜுக்கர்பெர்க்கின் இந்த முயற்சி மெட்டாவிற்கு ஒருபுதிய முயற்சியாக மட்டுமல்ல, AI இன் எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான உலகளாவிய போட்டியையும் தீவிரப்படுத்துகிறது" என்று தொழில் நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் Starlink இணைய சேவை; 1 மாதம் இலவசம்.. தலைசுற்றும் விலை; எலான் மஸ்க் திட்டம் என்ன?

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், கடந்த வாரம் குளோபல் மொபைல் பெர்சனல் கம்யூனிகேஷன் பை சேட்டிலைட் (GMPCS) உரிமத்தை தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (DoT) பெற்றுள்ளது. இதன் மூலம் உலகின் பல நாடுகளில்... மேலும் பார்க்க

நீல் மோகன்: இந்திய - அமெரிக்கரை தக்கவைக்க 100 மில்லியன் டாலர் வழங்கிய கூகுள்! - ஏன் தெரியுமா?

10 ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் நிறுவனம் ஓர் இந்திய - அமெரிக்க தொழிலதிபர், ட்விட்டர் நிறுவனத்துக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக 100 மில்லியன் டாலர்கள் வழங்கியது என்றால் நம்ப முடிகிறதா?செரொதா நிறுவனத... மேலும் பார்க்க

Veo 3: சினிமாவின் எதிர்காலம் இதுதானா? - டெக் உலகை அதிரவைத்த கூகுளின் புதிய AI!

இந்த வாரத் தொடக்கத்தில் கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாடு I/O 2025 நடைபெற்றது. இதில் பல ஏஐ அப்டேட்களுடன் கூகுள், அதன் ஏஐ வீடியோ உருவாக்கும் மாடல் Veo 3 -ஐ வெளியிட்டது. இது கூகுள் ஃப்ளோ த... மேலும் பார்க்க

AI-ஐ நம்பி 700 பேரை பணி நீக்கம் செய்த நிறுவனம்.. மீண்டும் மனிதர்களை அழைப்பது ஏன்?

செயற்கை நுண்ணறிவு மிகப் பெரிய சக்தியாக வளர்ந்திருந்தாலும், அதனால் மனிதர்களைத் தாண்டிய புத்திக்கூர்மையுடன் செயல்பட முடியாதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது சமீபத்தில் நடந்த சம்பவம். ஸ்வீடனில் உள்ள நிதி ... மேலும் பார்க்க

"Apple தொழிற்சாலைகளைச் சீனாவில் தொடங்க காரணம்..." - ஆப்பிள் தலைமை அதிகாரி டிம் குக் சொன்னது என்ன?

சமீபத்தில் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது இந்தியா முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது.அது...ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகார... மேலும் பார்க்க