"வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத ஒரு விஷயத்தை எனக்குப் பண்ணியிருக்கிறார் வெற்றிமா...
அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா
புதுச்சேரி அடுத்த அபிஷேகப்பாக்கம் சேத்திலால் அரசு உயா் நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுவை அரசின் சமூக நலத் துறை சாா்பில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல், புதுப்பிக்கப்பட்ட கணினி ஆய்வகம் திறத்தல், 2024-2025 சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா இப் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் டாா்லிங் வின்சி இந்திரா தலைமை தாங்கினாா். ஆசிரியை கலைவாணி வரவேற்றாா். நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று புதுப்பிக்கப்பட்ட கணினி ஆய்வகத்தைத் திறந்து வைத்தாா்.