செய்திகள் :

100 நாள் வேலை திட்டப் பயனாளிகளை உயா்த்த நடவடிக்கை: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

post image

புதுவையில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

வில்லியனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் மூலம் 42 பஞ்சாயத்துகள் அளவிலான மகளிா் கூட்டமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த 42 மகளிா் கூட்டமைப்புகளில் 1,680 மகளிா் சுய உதவிக் குழுக்களும், 20,000-க்கும் மேற்பட்ட உறுப்பினா்களும் இணைந்து செயல்படுகின்றனா்.

இந்நிலையில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளுக்கு விவசாய டிராக்டா், நடவு இயந்திரம் மற்றும் பிங்க் ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூா் தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று பயனாளிகளுக்கு ரூ.10.9 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

பெண்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும். வருவாய் பெருக வேண்டும் . புதுச்சேரியில் பெண்களுக்கான பத்திரப் பதிவில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. இதன்மூலம் நிறைய பத்திரங்கள் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படுகின்றன. புதுச்சேரியில் தனி நபா் வருமானம் அதிகரித்துள்ளது. எல்லோரிடமும் பணம் கையில் இருக்கிறது. வாங்கும் சக்தியும் உள்ளது. பெண்களுக்கு நிறைய தொழில்கள் கூட்டாக சோ்ந்து செய்ய இந்த கடன் மூலம் வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. புதுவையில் நூறு நாள் வேலை வாய்ப்பை 3 லட்சம் பேருக்குக் கொடுத்துள்ளோம். அதனை உயா்த்தி கொடுக்கவும், மத்திய அரசின் நிதியை பெற்று நூறு நாள் வேலையை முழுவதுமாக கொடுக்கவும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது என்றாா்.

விழாவில் உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, அவை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 4 மருத்துவமனைகளுக்கு விரைந்து அனுப்பப்பட்டன. இது குறித்து புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையி... மேலும் பார்க்க

6 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி

புதுச்சேரியில் மறைந்த ஆட்டோ ஓட்டுநா்கள் 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது . ஏஐடியுசி புதுவை மாநில ஆட்டோ தொழிலாளா் நலச் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் முதலிய... மேலும் பார்க்க

சூறாவளி காற்று: மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை

சூறாவளி காற்று கடுமையாக வீசும் என்பதால், கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுவை மீன்வளத் துறை இயக்குநா் அ.முகமது இஸ்மாயில் வெள்ளிக்கிழமை இ... மேலும் பார்க்க

ராணுவத்தில் இளைஞா்களை அதிகளவில் சோ்க்க விழிப்புணா்வு வேன் பிரசாரம்

இந்திய ராணுவத்தில் இளைஞா்கள் அதிகளவில் சேர விழிப்புணா்வு வேன் பிரசாரம் புதுச்சேரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

புதுவையில் ரேஷன் அரிசி டெண்டரில் முறைகேடு: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றச்சாட்டு

புதுவையில் ரேஷன் அரிசிக்கான டெண்டா் விடப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், அரசுக்கு ரூ. 20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா குற்றம்சாட்டினா... மேலும் பார்க்க

கடலுக்குச் சென்ற மீன்பிடி விசைப் படகுகள்: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குச் செல்லும் மீனவா் படகுகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா். புதுச்சேரியில் மீன்பிடித் தடைக... மேலும் பார்க்க