அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
விமான விபத்து: புதுவை முதல்வா் இரங்கல்
குஜராத் மாநிலத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட கோர விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: அகமதாபாதிலிருந்து 242 பயணிகளுடன் லண்டன் சென்ற ஏா் இந்தியா பயணிகள் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 240 உயிரிழந்ததாக வரும் செய்திகள் மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயம் அடைந்தவா்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராா்த்திக்கிறேன்.