`என்னுடைய `அத்தான்’ ‘அரவிந்த்சாமி’ சாருக்கு மிக்க நன்றி..!' - கார்த்தி | Vikatan Awards
திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில், Best entertainer விருதினை மெய்யழகன் திரைப்படத்தில் நடித்ததற்காக கார்த்தி இந்த விருதை பெற்றார். இந்த விருதினை இயக்குநர் வெற்றிமாறன் வழங்கினார்.
விருதினை பெற்று பேசிய நடிகர் கார்த்தி, “மெய்யழகன் திரைப்படத்தில் நடித்தது பெரிய சுகம். அதற்காக ஆனந்த விகடன் சினிமா விருது என்பது பெரிய சந்தோஷம். முதலில் இயக்குநர் பிரேம் அவர்களுக்கு நன்றியை சொல்கிறேன்.
70களில் இருந்து 90கள் வரை வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை அழகாக எழுதிய பிரேம் அவர்களுக்கு நன்றி. பிறகு கதையை சொன்ன உடனே படத்தை தயாரிக்க முன் வந்த, 2D என்டர்டெயின்மென்ட் அண்ணா சூர்யா அவர்களுக்கும் நன்றி. நான் எவ்வளவு இந்த படத்தை நேசித்தேனோ அந்த அளவிற்கு இந்த படத்தை நேசித்த என்னுடைய அத்தான் ‘அரவிந்த்சாமி’ சாருக்கு மிக்க நன்றி.

அரவிந்த்சாமி சாருடன் பேசுவதே மிகப்பெரிய பாடம். இன்றைக்கு நமக்கு பிடித்த நபர்களுடன் நிறைய விஷயங்களை நாம் ஷேர் செய்யாமல் இருக்கிறோம்.
மெய்யழகன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த், கேமராமேன் மார்டின், டைரக்டர் என படத்தில் பணியாற்றிய அனைவராலும் தான் இது சாத்தியமானது. ஏதோ ஒரு படம் பண்ணாலும் அந்த படம் நேரடியாக ஆடியன்ஸ்க்கு சென்று விடும்.
ஆனால் இந்த படம் ஆடியன்ஸ்க்கு சென்றாலும் எப்பொழுதும் எங்களுடன் நெருக்கமாகவே உள்ளது. இந்த படம் எப்போது ஆரம்பித்தோம் எப்போது முடித்தோம் என்று தெரியாது, அந்த அளவிற்கு அழகாக இந்த படம் அமைந்தது. இந்த திரைப்படத்திற்கு விருது கொடுத்த கௌரவித்த விகடனுக்கு நன்றி.” என்று கூறினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...