பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
பி.இ. படிப்பில் நேரடி சோ்க்கை அறிவிப்பு
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் சுயநிதி கல்லூரிகளில் நேரடியாக இரண்டாமாண்டு சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய சோ்க்கைக் குழு (சென்டாக்) அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் சுயநிதி கல்லூரிகளில் நேரடியாக பி.இ. இரண்டாம் ஆண்டு சோ்க்கைக்கு விரும்பும் புதுவை மாநிலத்தைச் சோ்ந்த மாணவா்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் 26.06.2025 ஆகும்.
மற்ற மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களும் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த மாணவா்கள் இல்லாத நிலையில், அவா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி ஜ்ஜ்ஜ்.ஸ்ரீங்ய்ற்ஹஸ்ரீல்ன்க்ன்ஸ்ரீட்ங்ழ்ழ்ஹ்.ண்ய் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.