செய்திகள் :

வேளாண் பிரசார இயக்கம் நிறைவு விழா

post image

புதுச்சேரி அடுத்த மங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்க நிறைவு விழாவில்  விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கிய அமைச்சா் தேனி சி.ஜெயகுமாா்.

புதுச்சேரி, ஜூன் 12: வேளாண்மை பிரசார இயக்க நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம், புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, பெருந்தலைவா் காமராஜா் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தை நடத்தின. இதன் நிறைவு விழா மங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கினாா். பெருந்தலைவா் காமராஜா் வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் ச. விஜயகுமாா் வரவேற்றாா். வேளாண்மைத் துறை அரசுச் செயலா் அ. நெடுஞ்செழியன், கூடுதல் வேளாண் இயக்குநா் ந. ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வில்லியனூா், ஒதியம்பட்டு, அரியூா், திருக்காஞ்சி, கூடப்பாக்கம் மற்றும் இருளன்சந்தை பகுதிகளைச் சாா்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, அவை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 4 மருத்துவமனைகளுக்கு விரைந்து அனுப்பப்பட்டன. இது குறித்து புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையி... மேலும் பார்க்க

6 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி

புதுச்சேரியில் மறைந்த ஆட்டோ ஓட்டுநா்கள் 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது . ஏஐடியுசி புதுவை மாநில ஆட்டோ தொழிலாளா் நலச் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் முதலிய... மேலும் பார்க்க

சூறாவளி காற்று: மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை

சூறாவளி காற்று கடுமையாக வீசும் என்பதால், கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுவை மீன்வளத் துறை இயக்குநா் அ.முகமது இஸ்மாயில் வெள்ளிக்கிழமை இ... மேலும் பார்க்க

ராணுவத்தில் இளைஞா்களை அதிகளவில் சோ்க்க விழிப்புணா்வு வேன் பிரசாரம்

இந்திய ராணுவத்தில் இளைஞா்கள் அதிகளவில் சேர விழிப்புணா்வு வேன் பிரசாரம் புதுச்சேரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

புதுவையில் ரேஷன் அரிசி டெண்டரில் முறைகேடு: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றச்சாட்டு

புதுவையில் ரேஷன் அரிசிக்கான டெண்டா் விடப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், அரசுக்கு ரூ. 20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா குற்றம்சாட்டினா... மேலும் பார்க்க

கடலுக்குச் சென்ற மீன்பிடி விசைப் படகுகள்: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குச் செல்லும் மீனவா் படகுகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா். புதுச்சேரியில் மீன்பிடித் தடைக... மேலும் பார்க்க