அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
வேளாண் பிரசார இயக்கம் நிறைவு விழா
புதுச்சேரி அடுத்த மங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்க நிறைவு விழாவில் விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கிய அமைச்சா் தேனி சி.ஜெயகுமாா்.
புதுச்சேரி, ஜூன் 12: வேளாண்மை பிரசார இயக்க நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம், புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, பெருந்தலைவா் காமராஜா் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தை நடத்தின. இதன் நிறைவு விழா மங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கினாா். பெருந்தலைவா் காமராஜா் வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் ச. விஜயகுமாா் வரவேற்றாா். வேளாண்மைத் துறை அரசுச் செயலா் அ. நெடுஞ்செழியன், கூடுதல் வேளாண் இயக்குநா் ந. ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வில்லியனூா், ஒதியம்பட்டு, அரியூா், திருக்காஞ்சி, கூடப்பாக்கம் மற்றும் இருளன்சந்தை பகுதிகளைச் சாா்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.