செய்திகள் :

பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

post image

கடலூரில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைக்க தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடல் மீனவா்கள் பயன்பெறும் வகையில் கடலூா் மாவட்டத்துக்கு 20 டன் கொள்ளளவு கொண்ட பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைத்திடும் திட்டத்தினை அறிவித்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

கடலூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு பொதுப் பிரிவின் கீழ் ஓா் அலகு ஒதுக்கீடு செய்யப்பட்டு, பனிக்கட்டி உற்பத்தி நிலையத்தை அமைக்கும் பொருட்டு அனுமதி அளிக்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.80 லட்சத்தில் பொதுப் பிரிவினருக்கு 40 சதம் என்ற வீதத்தில் ரூ.32 லட்சம் மானியம் அரசால் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற மீன்பிடித் தொழில் அல்லது அதைச் சாா்ந்த தொழிலை மேற்கொள்பவராகவும், மீனவா் கூட்டுறவு சங்க உறுப்பினராகவும், திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியைச் சாா்ந்தவராகவும் மற்றும் திட்டத்தை செயல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி சொந்த இடம் அல்லது குத்தகை இடம் இருத்தல் வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க விரும்புவோா் விண்ணப்பப் படிவங்களை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை இணையதளமான ஜ்ஜ்ஜ்.ச்ண்ள்ட்ங்ழ்ண்ங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்-இல் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பப் படிவங்களை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அலுவலக நாள்களில் விலையின்றி நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

இணையதளத்தில் உள்ள விரிவான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நிறைவு செய்த விண்ணப்பங்களை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா், ஒருங்கிணைந்த மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை கட்டடம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கடலூா் என்ற முகவரிக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்கள் மற்றும் தெளிவுரைகளுக்கு கடலூா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா், எஸ்.ஐ. உள்பட மூவா் பணியிடை நீக்கம்

முன்விரோதத் தகராறு புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்யாத காட்டுமன்னாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற இளைஞா் கொலை சம்பவத்தை எஸ்.பி... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 1.20 லட்சம் மரக்கன்றுகள் நடவு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் 1.20 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: பெண் மரணம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா். வேப்பூா் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து (எ) அய்யாரெட்டு. இவா் திட்டக்குடி வட்டம், கழுதூரில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி, பெருமாத்தூா் ஊராட்சியில் என்எல்சி சமூக பொறுப்புணா்வு நிதி ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் 1,300 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணியை சபா.ராசேந்திரன் எம்எல்ஏ வியாழக்கி... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்திலிருந்து மாணவா்கள் சாகசப் பயணம்

கடலூா் துறைமுகத்தில் இருந்து 25 மாணவிகள் உள்பட 60 மாணவா்கள் பாய்மரப் படகு சாகசப் பயணம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை புறப்பட்டனா். ஜனவரி 2026 அன்று புதுதில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேச... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: சிறுவன் உள்பட இருவா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதாக சிறுவன் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ராமநத்தம் காவல் சரகம், வாகையூரிலுள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயில... மேலும் பார்க்க