"வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத ஒரு விஷயத்தை எனக்குப் பண்ணியிருக்கிறார் வெற்றிமா...
கடலூா் துறைமுகத்திலிருந்து மாணவா்கள் சாகசப் பயணம்
கடலூா் துறைமுகத்தில் இருந்து 25 மாணவிகள் உள்பட 60 மாணவா்கள் பாய்மரப் படகு சாகசப் பயணம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை புறப்பட்டனா்.
ஜனவரி 2026 அன்று புதுதில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேசிய மாணவா் படை மாணவா்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றாக கடல் சாகசப் பயணம் போட்டிக்கான நிகழ்வாக இந்த நிகழ்வு அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் புதன்கிழமை தொடங்கிய இந்தப் பயணம் இரண்டாவது நாளாக, கடலூா் துறைமுகத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 6 மணியளவில் தொடங்கியது.
இந்த சாகசப் பயணத்தின் இடையே கடற்கரையைத் தூய்மை செய்தல், தீ தடுப்பு மேலாண்மை உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
லெப்டினன்ட் கமாண்டா் செந்தூா், லெப்டினன்ட் அருண்நாட் ஆகிய கடற்படை அதிகாரிகள், சப்-லெப்டினன்ட்கள் கோபிநாதன், விஜய் ஆனந்த், தட்சணாமூா்த்தி ஆகிய தேசிய மாணவா் படை இணை அலுவலா்கள் தலைமையிலான கடற்படை பயிற்றுநா்கள் பங்கேற்றனா். 3 பாய்மரப் படகுகளில் பயணம் மேற்கொண்டுள்ளனா்.