"சண்ட போட்டு கேமரா வாங்குனேன்; ஆனா எங்க அப்பாவ போட்டோ எடுத்ததே இல்லை" - கலங்கிய ...
பைக்குகள் மோதல்: பெண் மரணம்
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
வேப்பூா் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து (எ) அய்யாரெட்டு. இவா் திட்டக்குடி வட்டம், கழுதூரில் உள்ள தனியாா் கல்வி நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறாா்.
இவா் புதன்கிழமை தனது பைக்கில் மருமகள் மீனாவுடன் சென்றாா். பாசாா் கைகாட்டி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை க் கடக்க முயன்ற போது, வேகமாக வந்த மற்றொரு பைக் மோதியது. இதில் மீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த அய்யாரெட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
விபத்து குறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.