`சீக்கிரம் சொல்கிறேன்; ஆனால் தனுஷ் சார் சொன்னது கன்ஃபார்ம்' - வெற்றிமாறன் | Ana...
வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி, பெருமாத்தூா் ஊராட்சியில் என்எல்சி சமூக பொறுப்புணா்வு நிதி ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் 1,300 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணியை சபா.ராசேந்திரன் எம்எல்ஏ வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பெருமாத்தூா் ஊராட்சியில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்குவது தொடா்பாக, முதல்கட்டப் பணி ஏ.பிளாக் மாற்றுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது.
சபா.ராசேந்திரன் எம்எல்ஏ குடிநீா் இணைப்பு வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.
என்எல்சி நில எடுப்பு துறை பொது மேலாளா் சீனிவாசராகவன், துணைப் பொது மேலாளா் சேகா், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியச் செயலா் குணசேகரன், அவைத் தலைவா் வீர.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.