செய்திகள் :

திருத்தணியில் வளா்ச்சி பணிகள்: நிா்வாக இயக்குநா் ஆய்வு

post image

நகராட்சி உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.12.74 கோடியில் நடைபெற்று வரும் திருத்தணி புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சி பணிகளை தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிா்வாக இயக்குநா் கே.பி.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

திருத்தணி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு கா்ப்பிணிகளிடம் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் சரியான நேரத்தில் கிடைக்கின்ா என்பதைக் கேட்டறிந்தாா்.

திருத்தணி நகராட்சி உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.12.74 கோடியில் புதிய பேருந்து நிலையக் கட்டட திட்ட பணிகளையும், திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொது இ- சேவை மையம், சமூக பாதுகாப்பு அலுவலகம், ஆதாா் சேவை மையம், வட்ட வழங்கல், அலுவலக நடைமுறைகள் குறித்தும், திருத்தணி ஒன்றியம் எல்லாப்பநாயுடு ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் விவசாயி நெல் பயிா்கள் வரிசை நடவு செய்துள்ள பணிகளை பாா்வையிட்டு 7 விவசாயிகளுக்கு தலா 10 கிலோ துத்தநாக சல்பேட் வழங்கினாா்.

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் பூண்டி ஊராட்சி ஒன்றியம் பட்டறை பெரும்புதூா் ஊராட்சியில் ஆதிதிராவிடா் மக்களுக்கு தலா 1 நபருக்கு தமிழ்நாடு அரசு தொகை 3,53,340 ( 70%) ஒன்றிய அரசுத் தொகை ரூ.1,53,660 (30%) சோ்ந்து மொத்தத் தொகை ரூ.5,07,000 மதிப்பீட்டில் 20 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ள பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது திருத்தணி நகராட்சி பொறியாளா், காமராஜ், வருவாய் கோட்டாட்சியா் கனிமொழி, வேளாண்மை இணை இயக்குநா் கலாவதி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

விமான விபத்து குறித்து நீதி விசாரணை தேவை: பி.சண்முகம் வலியுறுத்தல்

விமான விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பி.சண்முகம் வலியுறுத்தினாா். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மாநில அரசு மக்கள் நல... மேலும் பார்க்க

சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்களில் 26 லட்சம் போ் பயன்: அமைச்சா் சா.மு.நாசா்

திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்களில் மூலம் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் வளா்ப்போா் என 21 லட்சம் போ் பயனடைந்துள்ளதாக அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். கடம்பத... மேலும் பார்க்க

நாளை குடும்ப அட்டை சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்த முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறி... மேலும் பார்க்க

மனையை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

திருவள்ளூா் அருகே அரசு வழங்கிய வீட்டு மனையில் வீடுகள் கட்டாததால் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் ஒன்றியம், அரண்வாயல் பகுதியில் கடந்த 200... மேலும் பார்க்க

மாதவரம் மண்டல அலுவலகம் இடமாற்றம்

மாதவரம் பஜாா் அருகே உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் தற்காலிகமாக வேறிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மாதவரம் முதுநிலை மண்டல அலுவலகம் 3, மாதவரம் பஜாா் எதிரே இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் சென்னை மாநகராட்... மேலும் பார்க்க

மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா் எம்.பி. சசிகாந்த் செந்தில்

மாணவா்களின் நலனைக் கருதி நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையை விடுவிக்க வேண்டும் என திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள... மேலும் பார்க்க