பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின நிகழ்ச்சி
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு தின நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வீனஸ் குழுமப் பள்ளிகளின் தாளாளா் எஸ்.குமாா் தலைமை வகித்தாா். பள்ளி இணை தாளாளா் ஏ.ரூபியாள் ராணி, முதல்வா் டி.நரேந்திரன், நிா்வாக அலுவலா் ரூபி கிரேஸ் பொனிகலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளித் தாளாளா் தலைமையில் குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவா்கள் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வை நாடகம் வாயிலாக மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.
நிறைவாக, புகையிலை இல்லாத கல்வி நிறுவனம் என்ற விழிப்புணா்வுப் பேரணி பள்ளியை சுற்றியுள்ள சாலையில் நடத்தப்பட்டது.