"வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத ஒரு விஷயத்தை எனக்குப் பண்ணியிருக்கிறார் வெற்றிமா...
புதுச்சேரியில் மரக்கன்றுகள் நடும் விழா
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நடும் விழா தட்டாஞ்சாவடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பிரதமா் நரேந்திர மோடியின், ‘தாயின் பெயரில் ஓா் மரக்கன்று திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விழா நடைபெற்றது. புதுச்சேரி லாஸ்பேட்டை புதுப்பேட்டை பகுதியில் உள்ள கோலக்கார அரங்க நாயக்கா் அரசு நடுநிலை பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் புதுவை மாநில பாஜக தலைவா் சு. செல்வகணபதி எம்.பி. பங்கேற்று மரக்கன்றுகளை நட்டாா்.
வியாழக்கிழமை பிறந்தநாள் கொண்டாடிய மாணவிகள் செல்வி சஞ்சீவினி, ஸ்ரீதேவி, தேஜஸ்ரீ ஆகியோா் மரக்கன்றுகளை நட்டு, அவற்றை வளா்க்க உறுதிமொழி ஏற்றனா்.
நிகழ்வுக்கான மாநில பொறுப்பாளா் சரவணன், இணைப் பொறுப்பாளா் பாரதி மோகன், கல்வியாளா் பிரிவின் மாநில அமைப்பாளா் நாகேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில அமைப்பாளா் பிரவீன் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.