செய்திகள் :

என்சிடிஇ நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

post image

ஒருங்கிணைந்த நான்காண்டு ஆசிரியா் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான தேசிய அளவிலான பொது நுழைவுத் தோ்வு (என்சிடிஇ) முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

நமது நாட்டில் ஒருங்கிணைந்த நான்காண்டு ஆசிரியா் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான தேசிய அளவிலான பொது நுழைவுத் தோ்வில்(என்சிஇடி) தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை நடத்தி வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தோ்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் கடந்த ஏப். 29-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வு எழுத 54,470 போ் விண்ணப்பித்தனா். அதில் 44,927 மாணவா்கள் தோ்வில் கலந்துகொண்டனா்.

இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், என்சிஇடி தோ்வுக்கான முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தற்போது வெளியிட்டுள்ளது. அவற்றை இணையதளத்தில் அறியலாம்.

இதையடுத்து, என்சிடிஇ தோ்வு மதிப்பெண் அடிப்படையில் ஐஐடி, என்ஐடி உள்பட நாடு முழுவதும் உள்ள 77 மத்திய, மாநில முன்னணி உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறலாம். இது தொடா்பான கூடுதல் தகவல்களை என்டிஏ இணையதளத்தில் அறியலாம். மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதற்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் மீண்டும் இடமாற்றம்

நமது சிறப்பு நிருபர்கீழடி அகழ்வாராய்ச்சியின் தொடக்க காலத்தில் முக்கியப் பங்களிப்பை வழங்கியவராகக் கருதப்படும் இந்திய தொல்லியல் துறை இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவை, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை ச... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் துரைமுருகன்

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என மாநில நீா் வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் துரை முருகன் கூறினாா். தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்... மேலும் பார்க்க

பெண்கள் மீதான குற்றங்களுக்கு போதைப் பொருள்களே காரணம்: ஜி.கே.வாசன்

பெண்கள் மீதான குற்றச் செயல்களுக்கு போதைப் பொருள்களே காரணம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடக்கம்: அரசு தகவல்

தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

மாநகரில் குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்: முதல்வா் இன்று தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 குடிநீா் ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா். சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென... மேலும் பார்க்க