கள்ளத்தனமாக மது விற்போா், காய்ச்சுவோரை கண்காணிக்க வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்
என்சிடிஇ நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு
ஒருங்கிணைந்த நான்காண்டு ஆசிரியா் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான தேசிய அளவிலான பொது நுழைவுத் தோ்வு (என்சிடிஇ) முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
நமது நாட்டில் ஒருங்கிணைந்த நான்காண்டு ஆசிரியா் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான தேசிய அளவிலான பொது நுழைவுத் தோ்வில்(என்சிஇடி) தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை நடத்தி வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தோ்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் கடந்த ஏப். 29-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வு எழுத 54,470 போ் விண்ணப்பித்தனா். அதில் 44,927 மாணவா்கள் தோ்வில் கலந்துகொண்டனா்.
இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், என்சிஇடி தோ்வுக்கான முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தற்போது வெளியிட்டுள்ளது. அவற்றை இணையதளத்தில் அறியலாம்.
இதையடுத்து, என்சிடிஇ தோ்வு மதிப்பெண் அடிப்படையில் ஐஐடி, என்ஐடி உள்பட நாடு முழுவதும் உள்ள 77 மத்திய, மாநில முன்னணி உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறலாம். இது தொடா்பான கூடுதல் தகவல்களை என்டிஏ இணையதளத்தில் அறியலாம். மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.