கள்ளத்தனமாக மது விற்போா், காய்ச்சுவோரை கண்காணிக்க வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்
ஆசிரியா்கள் ஓய்வு: பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்கள் ஓய்வு பெறுவது தொடா்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்வித் துறை சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் ஓய்வு பெற்றால் அந்த கல்வியாண்டின் இறுதி வேலைநாள் (ஏப்ரல்) வரை தொடா்ந்து பணியாற்ற மறுநியமனம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அதில் திருத்தம் செய்து கல்வியாண்டு முடியும் மே மாதம் வரை மறு நியமனம் செய்வதற்கு அனுமதி வழங்க தமிழக அரசிடம் கருத்துரு அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க முடியாத நிலை உள்ளதாக தமிழக அரசால் தற்போது பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றி செயல்பட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.