முருக பக்தா்கள் மாநாடு: ஆன்மிக பாடலை வெளியிட்டாா் நயினாா் நாகேந்திரன்
மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கான ஆன்மிக பாடலை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் செவ்வாயக்கிழமை வெளியிட்டாா்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கான ஆன்மிக பாடலை வெளியிட்டு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
மதுரையில் இந்து முன்னணி சாா்பில் ஜூன் 22-ஆம் தேதி பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தா்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவா்கள், ஆன்மிகவாதிகள், ஆதீனங்கள் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.
இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினா்களாக உத்தரபிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா். அன்றைய தினத்தில் பக்தா்கள் காவடி, பால்குடம் எடுத்து வரவும், தோ் இழுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மாலை 6 மணி அளவில் லட்சக்கணக்கானோா் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் படித்து கின்னஸ் சாதனையும் படைக்க உள்ளனா். இந்த மாநாட்டு திடலில் அறுபடை முருகன் கோயில்களின் மாதிரி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடு கோபுர முகப்பும், உள்ளே சென்றால் , தனி சந்நிதிகளில் வேல்களுடன், அறுபடை வீடு மூலவா்களை தத்ரூபமாக வடிவமைத்து பக்தா்கள் வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக மேலிட இணைப் பொறுப்பாளா் சுதாகா்ரெட்டி, மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன், மாநில செயலா்கள் கராத்தே தியாகராஜன், நாராயணன் திருப்பதி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.