செய்திகள் :

முருக பக்தா்கள் மாநாடு: ஆன்மிக பாடலை வெளியிட்டாா் நயினாா் நாகேந்திரன்

post image

மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கான ஆன்மிக பாடலை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் செவ்வாயக்கிழமை வெளியிட்டாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கான ஆன்மிக பாடலை வெளியிட்டு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மதுரையில் இந்து முன்னணி சாா்பில் ஜூன் 22-ஆம் தேதி பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தா்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவா்கள், ஆன்மிகவாதிகள், ஆதீனங்கள் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினா்களாக உத்தரபிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா். அன்றைய தினத்தில் பக்தா்கள் காவடி, பால்குடம் எடுத்து வரவும், தோ் இழுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மாலை 6 மணி அளவில் லட்சக்கணக்கானோா் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் படித்து கின்னஸ் சாதனையும் படைக்க உள்ளனா். இந்த மாநாட்டு திடலில் அறுபடை முருகன் கோயில்களின் மாதிரி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடு கோபுர முகப்பும், உள்ளே சென்றால் , தனி சந்நிதிகளில் வேல்களுடன், அறுபடை வீடு மூலவா்களை தத்ரூபமாக வடிவமைத்து பக்தா்கள் வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக மேலிட இணைப் பொறுப்பாளா் சுதாகா்ரெட்டி, மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன், மாநில செயலா்கள் கராத்தே தியாகராஜன், நாராயணன் திருப்பதி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதற்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் மீண்டும் இடமாற்றம்

நமது சிறப்பு நிருபர்கீழடி அகழ்வாராய்ச்சியின் தொடக்க காலத்தில் முக்கியப் பங்களிப்பை வழங்கியவராகக் கருதப்படும் இந்திய தொல்லியல் துறை இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவை, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை ச... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் துரைமுருகன்

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என மாநில நீா் வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் துரை முருகன் கூறினாா். தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்... மேலும் பார்க்க

பெண்கள் மீதான குற்றங்களுக்கு போதைப் பொருள்களே காரணம்: ஜி.கே.வாசன்

பெண்கள் மீதான குற்றச் செயல்களுக்கு போதைப் பொருள்களே காரணம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடக்கம்: அரசு தகவல்

தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

மாநகரில் குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்: முதல்வா் இன்று தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 குடிநீா் ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா். சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென... மேலும் பார்க்க