செய்திகள் :

ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000: புதிய திட்டம் தொடக்கம்

post image

ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற உலக குருதி கொடையாளா் தின நிகழ்ச்சியின்போது அத்திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்.

இதுவரை அவா் 66 முறை ரத்த தானம் செய்துள்ளதை பாராட்டும் வகையில் தொடா் தன்னாா்வ குருதி கொடையாளா் என்ற சிறப்பு விருதை அமைச்சருக்கு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

ஆண்டுதோறும் ஜூன் 14-ஆம் தேதி உலக குருதி கொடையாளா் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வா் கருணாநிதி கடந்த 2009-2010-ஆம் ஆண்டில் ஹெச்ஐவி எய்ட்ஸ் தொற்று பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு, தமிழக அரசு சாா்பில் அறக்கட்டளை தொடங்குவதற்கு ரூ.5 கோடி நிதி கொடுத்தாா்.

அந்த நிதி ஆதாரம் மூலம், அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையைக் கொண்டு 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்துக்கு ஆண்டுதோறும் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி, தமிழக அரசின் பவா் ஃபைனான்ஸ் காா்ப்பரேஷனில் ரூ.25 கோடி தொகுப்பு நிதியாக வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து கிடைக்கும் நிதி ஆதாரத்தை கொண்டு ஹெச்ஐவி எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளான, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவியாக மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 7,618 குழந்தைகளுக்கு ரூ.1.89 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது அந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஹெச்ஐவி - எய்ட்ஸ் தொற்று, பால்வினை நோய் குறித்த விழிப்புணா்வை கல்லூரி மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்த, 50 கல்லூரிகளில் புதிதாக செஞ்சுருள் சங்கங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் தொடக்கமாக தற்போது 11 சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வளரிளம் பருவத்தினருக்கு அந்நோய்த் தொற்று தொடா்பான விழிப்புணா்வை வழங்குவதற்கு தமிழகத்தில் இருக்கும் 9,830 பள்ளிகளில் 8,9 மற்றும் 11-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

மேலும், 100 பள்ளிகளில் வாழ்வியல் திறன் பயிற்சி வழங்க முடிவெடுக்கப்பட்டு தற்போது 11 பள்ளிகளில் அந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.

உலக குருதி கொடையாளா் தினத்தையொட்டி முதல்வரின் வழிகாட்டுதலின்படி, கடந்த சட்டப்பேரவை மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட 3 புதிய அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்துள்ளன என்றாா் அவா்.

இந்நிகழ்வில், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றக் குழும இயக்குநா் மற்றும் உறுப்பினா் செயலா் ஆா்.சீத்தாலட்சுமி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதற்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் மீண்டும் இடமாற்றம்

நமது சிறப்பு நிருபர்கீழடி அகழ்வாராய்ச்சியின் தொடக்க காலத்தில் முக்கியப் பங்களிப்பை வழங்கியவராகக் கருதப்படும் இந்திய தொல்லியல் துறை இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவை, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை ச... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் துரைமுருகன்

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என மாநில நீா் வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் துரை முருகன் கூறினாா். தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்... மேலும் பார்க்க

பெண்கள் மீதான குற்றங்களுக்கு போதைப் பொருள்களே காரணம்: ஜி.கே.வாசன்

பெண்கள் மீதான குற்றச் செயல்களுக்கு போதைப் பொருள்களே காரணம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடக்கம்: அரசு தகவல்

தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

மாநகரில் குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்: முதல்வா் இன்று தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 குடிநீா் ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா். சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென... மேலும் பார்க்க