சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து - ஒருவர் பலியான சோகம்!
Premalu 2 Update: 'ப்ரேமலு 2' திரைப்படம் கைவிடப்படுகிறதா? - என்ன சொல்கிறார் படத்தின் தயாரிப்பாளர்
கடந்தாண்டு மலையாளப் படங்கள் பலவற்றை தமிழ் சினிமாவிலும் தூள் கிளப்பியிருந்தன. அந்த வரிசையில் 'ப்ரேமலு', 'மஞ்சும்மல் பாய்ஸ்' உட்பட பல மலையாள படைப்புகள் கடந்தாண்டு பல பக்கங்களிலும் கவனம் ஈர்த்திருந்தன.
சொல்லப்போனால், இப்படியான வெற்றிகளின் மூலம் அந்த மலையாளப் படங்களின் குழுவினருக்கு நல்லதொரு இடமும் சினிமாவில் அடுத்தடுத்து கிடைத்தது.

முக்கியமாக, 'ப்ரேமலு' படத்தின் வெற்றிக்குப் பிறகு மமிதா பைஜூ தமிழ் சினிமாவிலும் பயங்கர பிஸியாக வலம் வருகிறார்.
அப்படத்தின் கதாநாயகனாக நஸ்லெனும் அடுத்தடுத்து முன்னணி கதாபாத்திரங்களிலும், முக்கியமான படங்களிலும் கமிட்டாகி வருகிறார்.
அந்தளவிற்கு 'ப்ரேமலு' திரைப்படம் ஹிட்டடித்திருந்தது. இப்படம் வெளியான சில நாட்களிலேயே 'ப்ரேமலு -2' வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அப்போதிருந்து அப்படத்தின் அப்டேட்கள் குறித்தும் பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு விகடனுக்கு அளித்த பேட்டியில் அப்படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இந்தாண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்குவோம் என அறிவித்திருந்தார்.
ஆனால், படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் பல்வேறு தகவல்களும் கிசுகிசுவாகப் பேசப்பட்டன.

தற்போது அப்படத்தின் இணைத் தயாரிப்பாளரான, இயக்குநர் மற்றும் நடிகர் திலீஷ் போத்தன் அத்திரைப்படத்தின் படப்பிடிப்புத் தொடர்பாகப் பேசியிருக்கிறார். அவர், "'ப்ரேமலு 2' படம் தற்போது தாமதமாகியிருக்கிறது.
அத்திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பணிகளை எப்போது தொடங்குவோம் என்பது தெளிவாகவில்லை. ஆனால், அப்படத்தின் இயக்குநர் கிரிஷ் எங்களின் தயாரிப்பில் வேறொரு படத்தைக் கூடிய விரைவில் இயக்கவிருக்கிறார்." எனக் கூறியிருக்கிறார்.
திலீஷ் போத்தன், ரோஷன் மேத்யூ ஆகியோர் நடித்திருக்கும் 'ரோந்த்' என்கிற மலையாளப் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...