செய்திகள் :

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அர்ச்சகர் பயிற்சி சங்கம் எதிர்ப்பு

post image

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மதுரையில் ஜூன் 22 ஆம் தேதியில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் முருகனின் அறுபடை வீடுகள் மாதிரிகளை அமைக்க காவல்துறையினர் மறுப்பு தெரிவிப்பதாக இந்து முன்னணி அமைப்பினர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அறுபடை வீடுகளின் மாதிரிகளை அமைக்கலாம்; ஆனால், பூஜைகள் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், அறுபடை வீடுகளை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்று அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் இடையீட்டு மனு அளித்துள்ளது.

இதுகுறித்த மனுவில், அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கத் தலைவர் வா. அரங்கநாதன் கூறுகையில், அறுபடை வீடுகளில் குறிப்பிட்ட ஆகம முறைப்படியே, மூலவருக்கு பூஜைகள் செய்து, உற்சவரை மட்டுமே வெளியே கொண்டுவர இயலும். ஆனால், இந்து முன்னணியினர் அமைக்கும் அறுபடை வீடுகளில் மூலவர் சிலையே அமைக்க முடியாது. மாதிரி அறுபடை வீடுகளில் இருவேளை பூஜை என்பது ஆகமத்துக்கே முரணானது.

அறுபடை வீடுகளில் குறிப்பிட்ட ஆகம முறைப்படியே பூஜை செய்ய வேண்டும். முருகனின் அறுபடை வீடுகளில் அறங்காவலர் குழு அனுமதி பெற்று, பாலாலயம் அமைத்து மூலவருக்கு உரிய பூஜைகள் செய்து, உற்சவரை மட்டுமே வெளியே கொண்டு வர முடியும். இதனால் இந்து முன்னணி அமைக்கும் அறுபடை வீடுகளில் மூலவர் சிலை அமைக்கவே முடியாது. உற்சவர் சிலையும் ஆகமப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்திய பிறகே பூஜை செய்ய முடியும்.

மாதிரி அறுபடை வீடுகளில் இருவேளை பூஜை என்பது ஆகமத்துக்கு முரணானது. மாதிரி அறுபடை வீடுகளில் பூஜைகளை அனுமதிப்பது கோடிக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையை அவமதிப்பதாகும். ஆன்மிகத்தை அரசியலுக்கும், கடவுளை கட்சிக்கும் பயன்படுத்தக் கூடாது.

மேலும், மாதிரி அறுபடை வீடுகளை அமைக்க இந்து சமய அறநிலையத் துறையிடமோ, மதுரை மாநகராட்சி, தீயணைப்புத் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமோ அனுமதி பெறவில்லை. ஆகையால், முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பழங்குடியின மாணவிக்கு வீடு, மடிக்கணினி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை ஐஐடியில் உயர்கல்வி பயில தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவிக்கு வீடு மற்றும் மடிக்கணினியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(ஜூன் 14) விடுமுறை அறிவிப்பு

அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(ஜூன் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மு... மேலும் பார்க்க

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை- இபிஎஸ்

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்ப... மேலும் பார்க்க

ஜூன் 18-ல் திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

கீழடி அகழாய்வுகளை வெளியிட மறுக்கும் பா.ஜ.க அரசைக் கண்டித்து வரும் 18ஆம் தேதி திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக மாணவர் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்ந... மேலும் பார்க்க

கடன் வசூலில் இம்சை செய்தால் 5 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதம்! ஆளுநர் ஒப்புதல்!

கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால், 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்ற மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள், ஏற்கெனவே நிதிச்சுமையில் இருக்கும் கடனாளிகளிடம் இருந்து ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்துப் பெற்ற இன்பதுரை, தனபால்

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகியோர் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்... மேலும் பார்க்க