மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
Dileep: "காதல் மற்றும் குடும்ப உறவுகளின் மாறிவரும் நிலையைப் பிரதிபலிக்கும் கதை!" - நடிகர் திலீப்
மலையாளத் திரையுலகில் நடிகர் திலீப் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ப்ரின்ஸ் & ஃபேமிலி. இது நடிகர் திலீப்பின் 150-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரையரங்க வெளியீட்டைத் தொடர்ந்து, இத்திரைப்படம் ஜூன் 20-ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் பிண்டோ ஸ்டீபன் இயக்கியிருக்கிறார்.
திலீப்பைத் தாண்டி, இப்படத்தில் தியான் ஸ்ரீனிவாசன், சித்திக், பிந்து பணிக்கர், ஜானி ஆண்டனி, மஞ்சு பிள்ளை உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

இந்தத் திரைப்படம் குறித்து இயக்குநர் பிண்டோ ஸ்டீபன் கூறியதாவது, “எனது முதல் படமான ப்ரின்ஸ் அண்ட் ஃபேமிலி என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது.
பழைய கால மற்றும் நவீனகால மனநிலைகளுக்கு இடையிலான உண்மையான மோதலை இது ஒரு ஆழமான பார்வையுடன் எடுத்துக்காட்டுகிறது. இந்தக் கதையில் என்னை நம்பியதற்காக மேஜிக் ஃப்ரேம்ஸ், திலீப் சார் மற்றும் எங்கள் நடிகர்களுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
நாங்கள் இப்படத்தை உருவாக்கியபோது ரசித்ததைப் போலவே, பார்வையாளர்களும் இப்படத்தை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்,” எனக் கூறியிருக்கிறார்.
நடிகர் திலீப் கூறியதாவது, “ப்ரின்ஸ் அண்ட் ஃபேமிலி எனக்கு மிக முக்கியமான படம்.
இது எனது 150-வது படம் என்பதால் மட்டுமல்ல, இன்றைய உலகில் காதல் மற்றும் குடும்ப உறவுகளின் மாறிவரும் நிலையைப் பிரதிபலிக்கும் கதை என்பதாலும் இது முக்கியமானது.
இத்தனை துடிப்பான குழுவுடன் பணிபுரிந்ததும், ப்ரின்ஸ் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததும் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தது.

இப்படம் இப்போது ZEE5-இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இதனால், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தக் கொண்டாட்டத்தை அனுபவிக்க முடியும் என்று நம்புகிறேன்,” எனக் கூறியிருக்கிறார்.