செய்திகள் :

சென்னை அரசு அருங்காட்சியகப் பணம் கையாடல்! 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை!

post image

சென்னை அரசு அருங்காட்சியகப் பணத்தைக் கையாடல் செய்த நால்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில், கடந்த 2003 முதல் 2007 ஆண்டுவரையில் நுழைவுக் கட்டணம் உள்பட அருங்காட்சியகப் பணம் ரூ. 5.44 லட்சத்தை கையாடல் செய்த வழக்கில், பணி ஓய்வுபெற்ற கணக்காளர் ஜஹாருல்லா, மேற்பார்வையாளர்களான ஜவஹர், ஜெயராஜ், உதவி இயக்குநர் தேவதாஸ் ஆகிய நால்வருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மொத்தமாக ரூ. 15.5 லட்சம் அபராதம் விதித்தும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், வழக்கில் சம்பந்தப்பட்ட தேவதாஸ் உயிரிழந்ததால், அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது.

நாட்டின் இரண்டாவது மிகப் பழமையான அருங்காட்சியகம் சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ளது. 16 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் 46 காட்சியகங்கள் கொண்ட 6 கட்டடங்கள் உள்ளன.

பழங்கால கலைப்பொருட்கள், கல் சிற்பங்கள், தாவரவியல் காட்சியகங்கள், படத் தொகுப்புகள் ஆகியவை பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும். மேலும் நாட்டுப்புற கலை மற்றும் இசையை பாதுகாக்கும் காட்சியகங்களும் உள்ளன.

பழங்குடியின மாணவிக்கு வீடு, மடிக்கணினி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை ஐஐடியில் உயர்கல்வி பயில தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவிக்கு வீடு மற்றும் மடிக்கணினியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(ஜூன் 14) விடுமுறை அறிவிப்பு

அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(ஜூன் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மு... மேலும் பார்க்க

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை- இபிஎஸ்

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்ப... மேலும் பார்க்க

ஜூன் 18-ல் திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

கீழடி அகழாய்வுகளை வெளியிட மறுக்கும் பா.ஜ.க அரசைக் கண்டித்து வரும் 18ஆம் தேதி திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக மாணவர் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்ந... மேலும் பார்க்க

கடன் வசூலில் இம்சை செய்தால் 5 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதம்! ஆளுநர் ஒப்புதல்!

கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால், 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்ற மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள், ஏற்கெனவே நிதிச்சுமையில் இருக்கும் கடனாளிகளிடம் இருந்து ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்துப் பெற்ற இன்பதுரை, தனபால்

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகியோர் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்... மேலும் பார்க்க