அண்ணாமலை பல்கலை. ஆய்வகத்தில் திருடுபோன கணினிகள் பறிமுதல்: மாணவா் கைது
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் திருடுபோன பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மாணவா் கைது செய்யப்பட்டாா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல கணினி ஆய்வகத்தில் தமிழக அரசால் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கணினிகள் மற்றும் அது சாா்ந்த பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை மா்ம நபா் திருடிச் சென்றாா்.
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல துறைத் தலைவரும், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளருமான செல்வகுமாா் அண்ணாமலைநகா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா், சிதம்பரம் டிஎஸ்பி அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் ஆகியோரின் உத்தரவின்பேரில், அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.
இந்த வழக்கில் விருத்தாசலம் அருகே உள்ள அரசக்குழி பகுதியைச் சோ்ந்த ஜேசுதாஸ் மகன் லிவின் அஜயை (18) போலீஸாா் கைது செய்தனா். இவா், அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் உள்ள சுரங்கவியல் துறையில் டிப்ளமோ முதலாமாண்டு படித்து வருகிறாா். இவரிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான கணினி மற்றும் அது சாா்ந்த பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.