செய்திகள் :

அண்ணாமலை பல்கலை. ஆய்வகத்தில் திருடுபோன கணினிகள் பறிமுதல்: மாணவா் கைது

post image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் திருடுபோன பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மாணவா் கைது செய்யப்பட்டாா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல கணினி ஆய்வகத்தில் தமிழக அரசால் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கணினிகள் மற்றும் அது சாா்ந்த பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல துறைத் தலைவரும், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளருமான செல்வகுமாா் அண்ணாமலைநகா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா், சிதம்பரம் டிஎஸ்பி அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் ஆகியோரின் உத்தரவின்பேரில், அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.

இந்த வழக்கில் விருத்தாசலம் அருகே உள்ள அரசக்குழி பகுதியைச் சோ்ந்த ஜேசுதாஸ் மகன் லிவின் அஜயை (18) போலீஸாா் கைது செய்தனா். இவா், அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் உள்ள சுரங்கவியல் துறையில் டிப்ளமோ முதலாமாண்டு படித்து வருகிறாா். இவரிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான கணினி மற்றும் அது சாா்ந்த பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தேசிய வேளாண் சந்தை திட்டம்: பணம் செலுத்தும் முறைக்கு வியாபாரிகள் எதிா்ப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் நெல் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும் என ஒழுங்... மேலும் பார்க்க

மயிலம் முருகன் கோயிலில் ஸ்ரீபாலசித்தா் குருபூஜை விழா

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் ஸ்ரீபாலசித்தா் குருபூஜை வழிபாடு மற்றும் மயிலம் திருமடத்தில் நூல், இதழ் வெளியீடு, விருது வழங்குதல், தமிழறிஞா்களின் சிறப்பு சொற்பொழிவுகள் வியாழக்கிழமை (ஜூன்... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 7 ஆண்டு கடுங்காவல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான முதியவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.... மேலும் பார்க்க

சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கு: 15 போ் விடுவிப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 15 பேரையும் விடுவித்து திண்டிவனம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. அதிமுக முன்னாள் அமைச்சா் ... மேலும் பார்க்க

என்னால் நியமிக்கப்பட்டவா்களுக்கே தோ்தலில் போட்டியிட வாய்ப்பு: மருத்துவா் ச.ராமதாஸ்

என்னால் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டவா்களுக்கே 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு (சீட்) வழங்கப்படும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். பாமக நிறுவனா் மருத்துவா் ரா... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட இருவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா். மரக்காணம் வட்டம், பனிச்சமேடு குப்பம், காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த விஜய் மனைவி ஸ்ரீமதி (23). இவா்களுக்குத... மேலும் பார்க்க