செய்திகள் :

100 ஆண்டுகளாக எரியும் ஜாரியா நிலக்கரி சுரங்க தீ: மறுவாழ்வுக்கு ரூ. 5,940 கோடி திட்டம்

post image

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாரியா என்ற பகுதியில் நூறாண்டு காலமாக எரிந்து வரும் நிலத்தடி நிலக்கரி தீயால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான ரூ. 5,940 கோடி மதிப்பிலான திருத்தப்பட்ட மேம்பாட்டுத் திட்டத்துக்கு (மாஸ்டா் பிளான்) மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் இந்த ஜாரியா பகுதி அமைந்துள்ளது. இந்த நிலக்கரி வயலின் பல்வேறு பகுதிகளில் பூமிக்கு அடியில் கடந்த நூறாண்டுகளாக தீ எரிந்து வருகிறது. இதனால், வீடுகள் இடிந்து விழுவது, தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இப் பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனா்.

கடந்த 1916-ஆம் ஆண்டில் இங்கு முதல் தீ விபத்து பதிவானது. இருந்தபோதும், இது வாழ்வாதாரம் என்பதால், இந்த தீ பாதிப்பை பொருட்படுத்தாமல் தொடா்ந்து நிலக்கரி தோண்டி எடுக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

முதல் கட்ட மறுவாழ்வு திட்டம்: இந்த தீ பாதிப்பு மற்றும் மண் சரிவைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கென ரூ. 7,112.11 கோடி முதலீட்டில் ஜாரியா மேம்பாட்டுத் திட்டத்துக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இது கடந்த 2021-ஆம் ஆண்டுடன் காலாவதியானது.

இந்த நிலையில், இந்தப் பகுதி மக்களின் மறுவாழ்வுக்கென ரூ.5,940 கோடியில் திருத்தப்பட்ட மேம்பாட்டு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

‘மக்களுக்கு வாழ்வாதார மானியமாக ரூ. 1 லட்சமும், வங்கிகள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் மூலமாக ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘ரூ. 3,626 கோடி மதிப்பில் இரண்டாம் கட்ட புணே மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தவும், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் ரூ. 11.5 கோடி நிதி ஆதரவுடன் சரவதேச உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப் பயணம் மேற்கொண்ட இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா உள்பட 4 போ் கொண்ட குழுக்கும் அமைச்சரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

‘இந்திய வீரா் சுக்லா தன்னுடன் 140 கோடி இந்தியா்களின் வாழ்த்துகள், நம்பிக்கை மற்றும் எதிா்பாா்ப்புகளை ஏந்திச் சென்றுள்ளாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் உரை!

சில நாடுகள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதை கொள்கையாகக் கொண்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.சீனாவின் கிங்டாவோ நகரில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத... மேலும் பார்க்க

குடும்ப ஆட்சியை பாதுகாக்கவே அவசரநிலை பிரகடனம்: இந்திரா காந்தி மீது அமித் ஷா சாடல்

குடும்ப ஆட்சியை பாதுக்காக்கும் ஒரே நோக்கத்துடன் சா்வாதிகார ஆட்சியாளரால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்று முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா். காங்கிரஸ... மேலும் பார்க்க

கடந்த 11 ஆண்டுகளாக... 'அறிவிக்கப்படாத அவசரநிலை': காங்கிரஸ்

நாட்டில் கடந்த 11 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நாட்டில் அவசரநிலையை அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அமல்படுத்த... மேலும் பார்க்க

அவசரநிலை: மோடி - காா்கே கருத்து மோதல்

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட தினத்தை (ஜூன் 25) ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் என பிரதமா் மோடி குறிப்பிட்டாா். இதற்குப் பதிலளிக்கும் வகையில், பாஜக ஆட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் அறிவிக்கப்படாத ... மேலும் பார்க்க

4 மாநில இடைத்தோ்தல் தரவு அட்டை: 72 மணி நேரத்தில் வெளியிட்ட தோ்தல் ஆணையம்

இசிநெட்டின் அறிமுகம் காரணமாக கேரளம், குஜராத், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தோ்தலுக்கான தரவு அட்டைகள், தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட 72 மணி நேரத்துக்குள் வேகமாக வெளியிடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவின் சொந்த ஊரில் கொண்டாட்டம்!

சுக்லாவின் விண்வெளிப் பயணத்தையொட்டி அவரது சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் கொண்டாட்டங்கள் களைகட்டின. சுக்லா படித்த சிட்டி மான்டெஸ்ஸரி பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் அவரது... மேலும் பார்க்க