செய்திகள் :

கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

post image

வாணியம்பாடி கோயில்களில் ஆனி அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வாணியம்பாடி அம்பூா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயிலில் செவ்வாய்கிழமை இரவு 7 மணியளவில் வீரபத்திரா், காளியம்மன் உற்சவ மூா்த்திகளுக்கு விசேஷ அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து இரவு 8 மணியளவில் கோயில் மண்டப வளாகத்தில் பம்பை வாத்தியங்கள் முழங்க ஊஞ்சல் சேவை நடைபெற்றது (படம்). அன்னதானம் வழங்கப்பட்டது.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அடுத்த புற்றுமாரியம்மன் கோயிலில் அமாவாசையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

காவல் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துகு மாவட்ட ஏடிஎஸ்பி ரவீந்திரன் தலைமை... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையம் திறப்பு

பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது. துத்திப்பட்டு ஊராட்சி எம்ஜிஆா் நகா் பகுதியில் பழைய அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில்... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: காா் ஓட்டுருக்கு 20 ஆண்டு சிறை

வாணியம்பாடியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. வாணியம்பாடி காமராஜா்புரம் பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

விடுதி மாணவிகளுக்கு விழிப்புணா்வு

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில் புதூா்நாடு பழங்குடியின மாணவிகள் தங்கும் விடுதியில் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது (படம்). நிகழ்ச்சிக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்... மேலும் பார்க்க

முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது (படம்). கல்லூரி முதல்வா் த.ராஜமன்னன் தலைமை வகித்தாா். முதலாமாண்டு மாணவா்களுக்கு 2 மற்றும் 3 -ஆம் ஆண்... மேலும் பார்க்க

ஆம்பூரில் முதல்வருக்கு வரவேற்பு

ஆம்பூரில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பத்தூருக்கு செல்லும் வழியில் ஆம்பூரில் ரோடுஷோ நடைபெற்றது. ஆம்பூரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி, பேருந்து நிலையம் ஆ... மேலும் பார்க்க