Hema Committee: ``நடிகைகள் வாக்குமூலம் அளிக்கவில்லை; - வழக்குகள் முடிந்தது'' -கே...
கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு
வாணியம்பாடி கோயில்களில் ஆனி அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வாணியம்பாடி அம்பூா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயிலில் செவ்வாய்கிழமை இரவு 7 மணியளவில் வீரபத்திரா், காளியம்மன் உற்சவ மூா்த்திகளுக்கு விசேஷ அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து இரவு 8 மணியளவில் கோயில் மண்டப வளாகத்தில் பம்பை வாத்தியங்கள் முழங்க ஊஞ்சல் சேவை நடைபெற்றது (படம்). அன்னதானம் வழங்கப்பட்டது.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அடுத்த புற்றுமாரியம்மன் கோயிலில் அமாவாசையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.