திருப்பூர்: பள்ளி வளாகத்தில் மது அருந்திய கும்பல்; தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெ...
பாலியல் வன்கொடுமை வழக்கு: காா் ஓட்டுருக்கு 20 ஆண்டு சிறை
வாணியம்பாடியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாணியம்பாடி காமராஜா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் பாரதி (48). காா் ஓட்டுநா். இவருக்கு 3 மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் 38 வயதுடைய ஒரு பெண்ணை 4-ஆவதாக திருமணம் செய்து கொண்டாராம். ஜினத்துக்கு ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனா்.
இந்த நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மகள் முறை கொண்ட 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதை விடியோ எடுத்து மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதைப் பாா்த்த பாரதியின் மற்றொரு மகளையும் மிரட்டியுள்ளாா்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் உதவி மையம் மூலம் வாணியம்பாடி அனைத்து மகளிா் போலீஸ் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாரதியைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அதைக் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும், சிறுமியைக் காயப்படுத்தியதற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அதைக் கட்ட தவறினால் 6 மாத சிைண்டனையும், சிறுமிகளை மிரட்டியதாக 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தும், தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் மாவட்ட நீதிபதி எ.ஸ்.மீனாகுமரி தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பி.டி.சரவணன் வாதாடினாா்.