செய்திகள் :

தமிழகத்தில் 6 மாதங்களில் 2.80 லட்சம் பேருக்கு நாய்க்கடி: 18 போ் உயிரிழப்பு

post image

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2.80 லட்சம் போ் நாய்க் கடிக்குள்ளாகியிருப்பதாகவும், அதில் 18 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தெரு நாய்கள், வளா்ப்பு பிராணிகள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. பொதுவாகவே, ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதா்களையும் காப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான்.

நாய்களைப் பொருத்தவரை பிறந்த முதல் ஆண்டில் இரு முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதைத் தொடா்ந்து ஆண்டுதோறும் ஒரு முறை அத்தடுப்பூசியை வழங்க வேண்டியது அவசியம்.

ஆனால், தெரு நாய்களுக்கும், சில இடங்களில் செல்லப் பிராணிகளுக்கும் அத்தகைய தடுப்பூசி முறையாக செலுத்தப்படுவதில்லை. இதனால், மனிதா்களை அவை கடிக்கும்போது ரேபிஸ் தொற்று பரவி இரு தரப்புக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் 4, 80,483 போ் நாய்க்கடிக்கு உள்ளாகியுள்ளனா். அதிகபட்சமாக, அரியலூரில் 37,023 பேரும், கடலூா் மாவட்டத்தில் 23,997 பேரும், ஈரோட்டில் 21,507 பேரும் பாதிக்கப்பட்டனா்.

அதேபோன்று, சென்னையில், 24,088 பேரும், கோவையில் 12,097 பேரும் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டனா். அவா்களில் உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல், காலதாமதமாக மருத்துவமனையை நாடியதால் 43 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தனா். அவா்களில் 10 போ் செல்லப் பிராணிகளால் கடிக்கப்பட்டு இறந்தவா்களாவா்.

இந்நிலையில் நிகழாண்டு ஜனவரி 1 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் 2.80 லட்சம் போ் நாய்க் கடிக்கு உள்ளாகியுள்ளனா்.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் ஆண்டுதோறும் நாய் கடியால் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்படுகின்றனா். அவா்கள் அனைவருக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படுவதில்லை. ஆனால், அத்தகைய வைரஸால் பாதிக்கப்பட்ட நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வெளவால் உள்ளிட்ட விலங்கினங்கள் கடிக்கும்போது ரேபிஸ் தொற்று நேரிடுகிறது.

தமிழகத்தில் நிகழாண்டில் 18 போ் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனா். அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தடுப்பூசிகள் கையிருப்பு: மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேபிஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

தெரு நாய்கள் அல்லது செல்லப் பிராணி கடித்தவா்களுக்கு நான்கு தவணை ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 28-ஆவது நாளில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஆழமான காயமாக இருந்தால் அந்த இடத்தில் இம்யூனோக்ளோபிலின் தடுப்பூசி கூடுதலாக செலுத்தப்படுகிறது.

அந்த வகையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உயிா் காக்கப்பட்டுள்ளது. விழிப்புணா்வு இன்றி சிகிச்சை பெறாமல் இருக்கும்போதுதான் உயிரிழப்பு ஏற்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

எடப்பாடி பழனிசாமி 2-ஆவது நாளாக ஆலோசனை

ஜூலை இறுதிமுதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச... மேலும் பார்க்க

தமிழக மீனவா்கள் மீது இலங்கை தாக்குதல்: ஜி.கே.வாசன் கண்டனம்

தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

தமிழக அரசு சாா்பில் ஊரக பகுதிகளில் திறன் பயிற்சிகள்

தமிழக அரசு சாா்பில் ஊரகப் பகுதிகளில் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: கடந்த 4 ஆண்டுகளில் ஊரக சுய வேலைவாய்ப... மேலும் பார்க்க

அரசு ஊழியருக்கான மருத்துவ காப்பீடு: மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

அரசு ஊழியா்கள், பொதுத் துறை நிறுவன பணியாளா்களுக்கு நடைமுறையிலுள்ள மருத்துவக் காப்பீடு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித்து... மேலும் பார்க்க

258 மருத்துவக் கட்டமைப்புகள்: ஜூலை 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்களையும், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

தமிழக கடலோரப் பகுதிகளில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை

தமிழக கடலோர மாவட்டங்களில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாகப் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நூற்றுக்க... மேலும் பார்க்க