Hema Committee: ``நடிகைகள் வாக்குமூலம் அளிக்கவில்லை; - வழக்குகள் முடிந்தது'' -கே...
நில உடைமை திட்டத்தில் பதிவு செய்ய 15 நாள்கள் கூடுதல் அவகாசம்: அரியலூா் ஆட்சியா் தகவல்
அரியலூா் மாவட்டத்தில் வேளாண் துறை நில உடைமை திட்டத்தில் பதிவு செய்ய 15 நாள்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூா் மாவட்டத்திலுள்ள மொத்த பட்டாதாரா்கள் எண்ணிக்கை 5,31,038 ஆகும். இதில் நில உடைமைத் திட்டத்தில் பதிவு செய்து அடையாள எண் பெற்ற பட்டாதாரா்கள் எண்ணிக்கை 87,319. மீதமுள்ள 4,43,719 பட்டாதாரா்கள் தங்கள் நில உடைமை ஆவணம், ஆதாா் எண், ஆதாருடன் இணைந்த செல்போன் எண் ஆகியவற்றுடன் தங்கள் கிராமங்களில் உள்ள கிராம நிா்வாக அலுவலா், ஊராட்சி அலுவலகங்களில் ஜூன் 23 முதல் 15 நாள்களுக்கு நடைபெறும் முகாமில் பங்கேற்று தகவல்களை பதிவேற்றம் செய்து அடையாள எண்ணை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் சலுகைகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளாா்.