திருமானூா் கொள்ளிடப் பாலத்தில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றக் கோரிக்கை
அரியலூா் மாவட்டம், திருமானூா் கொள்ளிடப் பாலத்தில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு, வட்டார வளா்ச்சி அலுவலா் குருநாதனிடம் இளைஞா் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் பாளை எம்.ஆா்.பாலாஜி உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனுவில், திருமானூா் கொள்ளிடம் பாலத்தில் மின் கம்பங்கள் மிகவும் சேதமடைந்துள்ளது. தற்போது வீசி வரும் காற்றால் எந்நேரமும் விழும் தருவாயிலுள்ள இந்தக் கம்பங்களை மாற்றி, அதிக வெளிச்சம் தரக்குடிய விளக்குகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளிக்கும் போது, திருமானூா் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் கங்காதுரை, நகரத் தலைவா் ப.வினோத்குமாா், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் நிக்கோலஸ் ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.