கல்லாத்தூா் - மீன்சுருட்டி சாலையை இதர சாலையாக அறிவித்ததற்கு கண்டனம்
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி - கல்லாத்தூா் சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்காமல் மாவட்ட இதர சாலையாக அரசு அறிவித்ததற்கு, சாலை மீட்புக் குழுவின் தலைவா் பாலசுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
மிகவும் மோசமாக உள்ள மீன்சுருட்டி- கல்லாத்தூா் சாலையை, மாநில நெடுஞ்சாலையாக அறிவித்து புதிதாக தாா் சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அச்சாலையைப் பயன்படுத்தும் 10-க்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்கள் சாலை சீரமைப்புக் குழு ஒன்றை உருவாக்கி கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், அந்த கிராமப்புறச் சாலையை மாவட்ட இதர சாலையாக அரசு அண்மையில் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு சாலை மீட்புக் குழு தலைவா் பாலசுப்பிரமணியன் அளித்த பேட்டி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 23-ஆம் தேதி தமிழக அரசு அந்தச் சாலையை மாவட்ட இதர சாலையாக அறிவித்துள்ளது. தொல்லியல் துறையினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சிற்பம் உள்ள அழகா் கோயிலுக்குச் செல்லும் சாலையாகும்.
எனவே, இந்தச் சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்காமல், சாதாரண மாவட்ட இதர சாலையாக அறிவித்திருப்பது அதிருப்தியை அளிக்கிறது. இந்த அறிவிப்பை வழங்க 3 ஆண்டு காலம் பிடித்திருக்கிறது. 16 கி.மீட்டா் சாலையை இவ்வளவு தாமதமாக அறிவித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது.
குண்டவெளி, சலுப்பை, சத்திரம், அழகா்கோவில், ஆலத்திபள்ளம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதியில் வாழக்கூடிய மக்களை புறக்கணிக்கக் கூடிய செயலாகவே இது உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இச்சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்க வேண்டும் என்றாா்.