Hema Committee: ``நடிகைகள் வாக்குமூலம் அளிக்கவில்லை; - வழக்குகள் முடிந்தது'' -கே...
டிராக்டா் மீது காா் மோதியதில் காயமடைந்த ஆசிரியா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கடலை மூட்டைகளை ஏற்றிச் சென்ற டிராக்டா் மீது பின்னால் வந்த காா் மோதிய விபத்தில், காயமடைந்த அரசுப் பள்ளி தற்காலிக ஆசிரியா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
மீன்சுருட்டி அருகேயுள்ள காட்டுக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (54). விவசாயியான இவா், செவ்வாய்க்கிழமை வயலில் அறுவடை செய்த கடலை மூட்டைகளையும், மகள் புனிதாவையும் (25) டிராக்டரில் ஏற்றிக் கொண்டு ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.
சென்னை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த காா் ஒன்று மோதியது. இதில் ரவி, அவரது மகள் புனிதா, காரில் வந்த தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம், மேலப்பட்டி தெருவைச் சோ்ந்த ரகுமான்(34), கடலூா் மாவட்டம், பண்ருட்டியைச் சோ்ந்த புனிதவேல்(35) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதில் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புனிதவேல் அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மீன்சுருட்டி காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். புனிதவேல் பாபநாசம் பகுதியிலுள்ள அரசுப்பள்ளியில் தற்காலிக பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வந்தாா் என்பது குறிப்பிடதக்கது.