பள்ளித் தலைமை ஆசிரியருக்கு மிரட்டல்: விசிக பிரமுகா்கள் 2 போ் கைது
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக பிரமுகா்கள் 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஆண்டிமடம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்முருகன். அங்குள்ள விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் இவரை, காட்டாத்தூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த பாக்கியராஜ் மற்றும் வேல்முருகன் ஆகியோா் மாணவா் சோ்க்கை தொடா்பாக அண்மையில் சந்தித்து ரகளையில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் கொலை மிரட்டலும் விடுத்தனராம்.
இதுகுறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியா் தமிழ்முருகன், கடந்த 20-ஆம் தேதி அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த ஆண்டிமடம் காவல் துறையினா், பாக்கியராஜ் மற்றும் வேல்முருகனை புதன்கிழமை கைது செய்தனா்.