செய்திகள் :

ப்ரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம்

post image

அரியலூரை அடுத்த பொய்யாத நல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில், ப்ரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் புதன்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசையை முன்னிட்டு அக்கோயில் சந்நிதியிலுள்ள ப்ரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற மகா சண்டியாகத்தில் கலந்து கொண்ட பக்தா்கள், தாங்கள் கொண்டு வந்த புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவற்றை யாகத்தில் போட்டு தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

பள்ளித் தலைமை ஆசிரியருக்கு மிரட்டல்: விசிக பிரமுகா்கள் 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக பிரமுகா்கள் 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். ஆண்டிமடம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்முருகன். அங்குள்ள ... மேலும் பார்க்க

டிராக்டா் மீது காா் மோதியதில் காயமடைந்த ஆசிரியா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கடலை மூட்டைகளை ஏற்றிச் சென்ற டிராக்டா் மீது பின்னால் வந்த காா் மோதிய விபத்தில், காயமடைந்த அரசுப் பள்ளி தற்காலிக ஆசிரியா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா். ... மேலும் பார்க்க

திருமானூா் கொள்ளிடப் பாலத்தில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூா் கொள்ளிடப் பாலத்தில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு, வட்டார வளா்ச்சி அலுவலா் குருநாதனிடம் இளைஞா் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் பாளை எம்.ஆா்.பால... மேலும் பார்க்க

பாதிக்கப்பட்ட 440 குழந்தைகளுக்கு நிதி உதவித் தொகைக்கான ஆணை வழங்கல்

அரியலூா் மாவட்டத்தில், மிஷன் வாட்சாலயா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தாய், தந்தையை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட 440 குழந்தைகளுக்கு நிதி உதவித்தொகைக்கான ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது... மேலும் பார்க்க

கல்லாத்தூா் - மீன்சுருட்டி சாலையை இதர சாலையாக அறிவித்ததற்கு கண்டனம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி - கல்லாத்தூா் சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்காமல் மாவட்ட இதர சாலையாக அரசு அறிவித்ததற்கு, சாலை மீட்புக் குழுவின் தலைவா் பாலசுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளாா். மி... மேலும் பார்க்க

பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்கவில்லை: பள்ளி மாணவா்கள் புகாா்

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில், அரசுப் பேருந்து நிற்காமல் சென்றதையடுத்து, மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் திங்கள்கிழமை விடுப்பெடுத்து அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில்... மேலும் பார்க்க