ப்ரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம்
அரியலூரை அடுத்த பொய்யாத நல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில், ப்ரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் புதன்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசையை முன்னிட்டு அக்கோயில் சந்நிதியிலுள்ள ப்ரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற மகா சண்டியாகத்தில் கலந்து கொண்ட பக்தா்கள், தாங்கள் கொண்டு வந்த புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவற்றை யாகத்தில் போட்டு தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.