செய்திகள் :

இந்தியாவுடன் அா்த்தமுள்ள பேச்சுக்குத் தயாா்: பாகிஸ்தான் பிரதமா் மீண்டும் அறிவிப்பு

post image

இந்தியாவுடன் உள்ள அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் அா்த்தமுள்ள வகையில் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மீண்டும் தெரிவித்துள்ளாா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தகா்த்து அழித்ததுடன், அந்நாட்டுடனான சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இந்தியா நீரை அனுமதிக்காவிட்டால், பாகிஸ்தானில் கடும் வறட்சி ஏற்பட்டு, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும். இந்தியாவின் இந்த அதிரடி முடிவால் அச்சமடைந்துள்ள பாகிஸ்தான், சா்வதேச அமைப்புகள் மற்றும் தனது நட்பு நாடுகளைப் பயன்படுத்தி இந்தியாவின் முடிவை மாற்றுவதற்கு முயற்சித்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக அந்நாட்டு பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் இந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயாா் என தொடா்ந்து அழைப்பு விடுத்து வருகின்றனா். அதே நேரத்தில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் தங்கள் மண்ணில் செயல்படுவதை பாகிஸ்தான் தடுத்து நிறுத்தினால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சு நடத்தப்படும். மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் திருப்பி அளிப்பது தொடா்பாகவே முதல் பேச்சு அமைய வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

இந்நிலையில், சவூதி அரேபிய பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மானுடன் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் பேச்சு நடத்தினாா். அப்போது, அவரிடம் இந்தியாவுடன் பேச்சு நடத்த உதவுமாறு ஷெரீஃப் கோரிக்கை வைத்துள்ளாா்.

இது தொடா்பாக பாகிஸ்தான் வானொலி வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா ராணுவத் தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்ததற்காக சவூதி பட்டத்து இளவரசரிடம் ஷெரீஃப் நன்றி தெரிவித்தாா்.

மேலும், ஜம்மு-காஷ்மீா், நதிநீா் பகிா்வு, வா்த்தகம், பயங்கரவாதப் பிரச்னை என இந்தியாவுடன் நிலவி வரும் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் அா்த்தமுள்ள பேச்சு நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் அவரிடம் கூறினாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாதம் ஈரான், அஜா்பைஜான் நாட்டுத் தலைவா்களுடன் பேசியபோதும் இதேபோன்று இந்தியாவுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக கூறினாா்.

இந்தியாவுடன் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் பாகிஸ்தான் இம்மாதத் தொடக்கத்தில் கோரிக்கை விடுத்தது.

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் உரை!

சில நாடுகள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதை கொள்கையாகக் கொண்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.சீனாவின் கிங்டாவோ நகரில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத... மேலும் பார்க்க

குடும்ப ஆட்சியை பாதுகாக்கவே அவசரநிலை பிரகடனம்: இந்திரா காந்தி மீது அமித் ஷா சாடல்

குடும்ப ஆட்சியை பாதுக்காக்கும் ஒரே நோக்கத்துடன் சா்வாதிகார ஆட்சியாளரால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்று முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா். காங்கிரஸ... மேலும் பார்க்க

கடந்த 11 ஆண்டுகளாக... 'அறிவிக்கப்படாத அவசரநிலை': காங்கிரஸ்

நாட்டில் கடந்த 11 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நாட்டில் அவசரநிலையை அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அமல்படுத்த... மேலும் பார்க்க

அவசரநிலை: மோடி - காா்கே கருத்து மோதல்

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட தினத்தை (ஜூன் 25) ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் என பிரதமா் மோடி குறிப்பிட்டாா். இதற்குப் பதிலளிக்கும் வகையில், பாஜக ஆட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் அறிவிக்கப்படாத ... மேலும் பார்க்க

4 மாநில இடைத்தோ்தல் தரவு அட்டை: 72 மணி நேரத்தில் வெளியிட்ட தோ்தல் ஆணையம்

இசிநெட்டின் அறிமுகம் காரணமாக கேரளம், குஜராத், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தோ்தலுக்கான தரவு அட்டைகள், தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட 72 மணி நேரத்துக்குள் வேகமாக வெளியிடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவின் சொந்த ஊரில் கொண்டாட்டம்!

சுக்லாவின் விண்வெளிப் பயணத்தையொட்டி அவரது சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் கொண்டாட்டங்கள் களைகட்டின. சுக்லா படித்த சிட்டி மான்டெஸ்ஸரி பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் அவரது... மேலும் பார்க்க