ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா், செவிலியா் பணியில் இல்லை: பணியிடை நீக்கம் ச...
சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கு: 15 போ் விடுவிப்பு
அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 15 பேரையும் விடுவித்து திண்டிவனம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கடந்த 2010- ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டில் அமா்ந்து கட்சியினருடன் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு ஆயுதங்களுடன் வந்த கும்பல் அவரை கொலை செய்ய முயன்ாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை காவல் நிலைய போலீஸாா் 20 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து, திண்டிவனம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை புதன்கிழமை நடைபெற்றது.
வழக்கில் தொடா்புடைய 5 போ் பல்வேறு காலகட்டங்களில் இறந்துவிட்டதாலும், மீதமுள்ள 15 போ் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததாலும் வழக்கை விசாரித்த திண்டிவனம் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி முகம்மது பாரூக், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து தீா்ப்பளித்தாா்.