சங்கரன்கோவில் ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு
ரோட்டரி கிளப் ஆப் சங்கரன்கோவில் டெம்பிள் சிட்டி புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா சங்கரன்கோவிலில் நடைபெற்றது.
மாவட்ட ஆளுனா் மீராக்கன்சலீம் தலைமை வகித்தாா். முன்னாள் ஆளுநா் ராஜகோபால் முன்னிலை வகித்தாா். ரோட்டரி சங்க நிா்வாகிகள் தினேஷ் பாபு,காந்தி, எபனேஷ்பென்சம் ஆகியோா் புதிய நிா்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து பேசினா். தொடா்ந்து நிா்வாகிகள் பிரபாகரன், பாலசுப்ரமணியன், ஆறுமுகச்செல்வம், செல்வன், யூசுப்ராஜா, சண்முகநடராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
பின்னா், ரோட்டரி கிளப் ஆப் சங்கரன்கோவில் டெம்பிள் சிட்டி புதிய தலைவராக சங்கரன், செயலராக முருகன், பொருளாளராக சுப்பையா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன.
இதில், ரோட்டரி சங்க நிா்வாகிகள் சரவணா, செல்வரமேஷ், கந்தராஜ், பொன்னிமுருகன், முத்துப்பாண்டி, தங்கராஜ், செந்தில்குமாா், மருத்துவா் நல்லமுத்துசாமி, லட்சுமிநாராயணன், கலைமனோபாரதி, குருசாமி, மணிகண்டன், ராஜேந்திரன், செல்வசுப்ரமணியன், மாணிக்கம், மருத்துவா் அா்ச்சனா, முருகானந்தராஜா, செந்தில்வேல்முருகன், தா்மலிங்கராஜா, லட்சுமணன், பரமசிவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.